தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் நரேன். இவர் நிழல் குத்து என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மலையாளத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும் தனது திறமையான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தினார். அதனால் தமிழில் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் இவரை ஹீரோ ஆக்கினார் மிஷ்கின். அதுதான் அவரின் முதல் திரைப்படம்.தமிழில் அந்த திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.
அதன்படி இவர் நடிப்பில் வெளியான நெஞ்சிருக்கும் வரை,பள்ளிக்கூடம் மற்றும் அஞ்சாதே போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன. இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்ததால் தமிழில் பட வாய்ப்புகள் இவருக்கு குறைய தொடங்கின. இருந்தாலும் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களையும் தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்.
இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த அசத்தி இருந்தார். இதனிடையே நரேன் கடந்த 2007 ஆம் ஆண்டு மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ள நிலையில் கடந்த வருடம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நரேன் சமீபத்தில் தனது குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…