CINEMA
‘மாவீரன்’ திரைப்படத்தை அமெரிக்காவில் குடும்பத்தோடு கண்டுகளித்த நடிகர் நெப்போலியன்… என்ன சொன்னாருன்னு தெரியுமா?…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். சீவலப்பேரி பாண்டி எனும் படத்தின் மூலம் மக்களின் மனதை ஆண்டவர் என்று கூட சொல்லலாம். நீண்ட காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கிவர் சமீபகாலமாக மீண்டும் சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு நடித்து வருகிறார்.
நடிப்பு மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டார் நெப்போலியன். ஆனால் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். தற்பொழுது இவர் ஹாலிவுட் திரைப்படங்களில் தனது கவனத்தை முழுவதுமாக செலுத்தி வருகிறார்.
டெவில்ஸ் நைட்(devil’s night ) என்ற திரைப்படத்தில் இவரது நடிப்பு மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் நெப்போலியன். தற்பொழுது இவர் அமெரிக்காவில் கால் பதித்து குடும்பத்துடன் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் நெப்போலியன். இவர் தற்பொழுது தனது முழு குடும்பத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாவீரன் ‘ திரைப்படத்தை தியேட்டருக்கு சென்று கண்டு மகிழ்ந்துள்ளார்.
இது குறித்து அவரே தனது instagram பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். மேலும் அந்த பதிவில் அவர், ‘நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இத்திரைப்படம் அவரது திரை வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமையும்’ என்றும் கூறியுள்ளார். இதோ அவரின் பதிவு…
View this post on Instagram