தமிழ் சினிமாவில் முதலில் ஒளிப்பதிவாளராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர் தான் இளவரசு. பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை மற்றும் கிழக்கு சீமையிலே போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் மகாநதி சங்கருக்கு பின்னணி குரல் கொடுத்திருப்பார். இதுவரை 13 படங்களில் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் நடிகராக மாறிய இளவரசு பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். முத்துக்கு முத்தாக மற்றும் மாயாண்டி குடும்பத்தார் என பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக விமல் நடித்த களவாணி திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சினிமாவில் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் இறுதியாக திருமாணிக்கம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய இளவரசு சகிலா பற்றி பெருமையாக பேசி உள்ளார். அதில், என் வாழ்க்கையில் நான் பெருமையாக சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால் எனக்கு சகிலாவுடன் கிடைத்த நட்பு மட்டும்தான். இவர் ஒரு கவர்ச்சி நடிகை என்று பலரும் பல விதமான விமர்சனங்களை கூறினாலும் அனைத்திற்கும் கோபம் இல்லாமல் பதிலளிக்க கூடியவர்.
ஹைதராபாத்தில் ராமோஜி ஸ்டூடியோவில் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது இவரும் ஹைதராபாத்திற்கு படப்பிடிப்புக்கு வந்திருப்பார். பலமுறை நானும் இவரும் ரயிலில் ஒன்றாக பயணம் செய்துள்ளோம். இவருடன் பேசிக் கொண்டிருந்தால் ஏறுன இடமும் தெரியாது இறங்கப் போற இடமும் எவ்வளவு சீக்கிரம் வரப்போகிறது என தெரியாது. உண்மையிலேயே என்னுடைய மனைவி மற்றும் அம்மா பற்றிய நான் நன்றாக புரிந்து கொண்டதற்கு முக்கிய காரணமே சகிலாவுடன் பேசியது தான். எல்லோருக்கும் ஒரு இமேஜ் இருக்கும்.
நாம ஏதாவது பேசினா அவங்க தப்பா எடுத்துப்பாங்க என்று நினைப்போம். ஆனால் நீ என்ன வேணாலும் பேசிக்கோ, நான் இப்படித்தான் என்று இருக்கக்கூடியவர் தான் சகிலா. எதற்கும் அஞ்சாமல் தன்னிடம் இருப்பதை வெளிப்படையாக பேசி யாரிடமும் கோபப்படாமல் அப்படி ஒரு குணத்தை வெளிப்படுத்தக்கூடியவர். இவருடன் பழகியதில் இருந்து என் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் திருதியும் கொண்டேன் என இளவரசு ஷகிலா பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…