தமிழ் சினிமாவில் முதலில் ஒளிப்பதிவாளராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர் தான் இளவரசு. பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை மற்றும் கிழக்கு சீமையிலே போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் மகாநதி சங்கருக்கு பின்னணி குரல் கொடுத்திருப்பார். இதுவரை 13 படங்களில் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் நடிகராக மாறிய இளவரசு பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். முத்துக்கு முத்தாக மற்றும் மாயாண்டி குடும்பத்தார் என பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக விமல் நடித்த களவாணி திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சினிமாவில் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் இறுதியாக திருமாணிக்கம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய இளவரசு சகிலா பற்றி பெருமையாக பேசி உள்ளார். அதில், என் வாழ்க்கையில் நான் பெருமையாக சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால் எனக்கு சகிலாவுடன் கிடைத்த நட்பு மட்டும்தான். இவர் ஒரு கவர்ச்சி நடிகை என்று பலரும் பல விதமான விமர்சனங்களை கூறினாலும் அனைத்திற்கும் கோபம் இல்லாமல் பதிலளிக்க கூடியவர்.
ஹைதராபாத்தில் ராமோஜி ஸ்டூடியோவில் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது இவரும் ஹைதராபாத்திற்கு படப்பிடிப்புக்கு வந்திருப்பார். பலமுறை நானும் இவரும் ரயிலில் ஒன்றாக பயணம் செய்துள்ளோம். இவருடன் பேசிக் கொண்டிருந்தால் ஏறுன இடமும் தெரியாது இறங்கப் போற இடமும் எவ்வளவு சீக்கிரம் வரப்போகிறது என தெரியாது. உண்மையிலேயே என்னுடைய மனைவி மற்றும் அம்மா பற்றிய நான் நன்றாக புரிந்து கொண்டதற்கு முக்கிய காரணமே சகிலாவுடன் பேசியது தான். எல்லோருக்கும் ஒரு இமேஜ் இருக்கும்.
நாம ஏதாவது பேசினா அவங்க தப்பா எடுத்துப்பாங்க என்று நினைப்போம். ஆனால் நீ என்ன வேணாலும் பேசிக்கோ, நான் இப்படித்தான் என்று இருக்கக்கூடியவர் தான் சகிலா. எதற்கும் அஞ்சாமல் தன்னிடம் இருப்பதை வெளிப்படையாக பேசி யாரிடமும் கோபப்படாமல் அப்படி ஒரு குணத்தை வெளிப்படுத்தக்கூடியவர். இவருடன் பழகியதில் இருந்து என் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் திருதியும் கொண்டேன் என இளவரசு ஷகிலா பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி ஆளுங்கட்சியான…
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதிக்கும் (24), ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் (25) காதல்…