#image_title
அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், நகைச்சுவை நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் வருகிற ஜூன் 10ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமணத்தில் நடனமாட மணமக்களுக்கு ரிகர்சல் நடத்தப்பட்டு வருகின்றதாம். இதற்கு நடனம் அமைப்பாளராக இருப்பது சாண்டி மாஸ்டராம். இந்த தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் அர்ஜுன். 90களில் பிரபல நடிகராக வலம் வந்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகின்றார். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா விஷால் நடிப்பில் வெளிவந்த மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
ஆனால் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகி இருக்கின்றார் இவருக்கும் பிரபல காமெடி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எளிமையாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் வருகிற ஜூன் 10ம் தேதி அர்ஜுன் கட்டி இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து ஜூன் 14ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில்தான் நடிகை ஐஸ்வர்யா பாலியில் தனது நண்பர்களுக்கு பேச்சுலர் பாட்டி கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து இன்று குடும்பத்துடன் ஹல்தி மற்றும் மெஹந்தி போன்ற பண்டிகையை கொண்டாடி இருந்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில் தற்போது புதியதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கின்றது. அதாவது தற்போதயெல்லாம் திருமணம் என்றாலே மணமகள் மற்றும் மணமகன் நடனம் ஆடுவது என்பது இயல்பாகிவிட்டது. மாப்பிள்ளையும் பொன்னும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் அர்ஜுன் மகள் திருமணத்தில், திருமணத்திற்கு முதல் நாள் மற்றும் திருமண நாளன்று மாப்பிள்ளையும் பொண்ணும் நடனமாட இருக்கிறார்கள். இதற்காக சாண்டி மாஸ்டரை கொரியோகிராபராக ஒப்பந்தம் செய்து ரிகர்சல் நடத்தப்பட்டு வருகின்றதாம். இந்த செய்தி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இந்தோனேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், தொடர் திருட்டுகளால் கடுப்பாகிப் போயிருந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடையொன்றுக்குள் புகுந்த நான்கு கொள்ளையர்களைக்…
தமிழக முதலமைச்சரின் "தாயுமானவர் திட்டத்தின்" கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கூட்டணி கட்சிகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், நிர்வாக…
குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தம்பதியர் இருவர் தங்களது மோட்டார்…
தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகள் வேகமாக மாறிவரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்காமல்…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான…