“அப்பா நான் உன் பொண்ணுப்பா”… வாய் பேச முடியாத மகளை சீரழித்த தந்தை… வயிற்றில் ஊறிய பூச்சி… வெளிச்சத்திற்கு வந்த திடுக்கிடும் உண்மை…!

Spread the love

மும்பை கஃப் பரேட் பகுதியில் அரங்கேறியுள்ள இந்த நெஞ்சை உறையவைக்கும் சம்பவம், ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத 20 வயது இளம்பெண் ஒருவர், தனது தந்தையாலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமாகியுள்ள கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2025 செப்டம்பர் மாதம், அந்தப் பெண் தன் வயிற்றில் ஏதோ மாற்றம் தெரிவதாகத் தனது பாட்டியிடம் சைகை மூலம் தெரிவித்ததை அடுத்து, மருத்துவப் பரிசோதனையில் அவர் ஐந்து மாதக் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

ஆரம்பத்தில் இந்தப் பெண் பேச முடியாத நிலையில் இருந்ததாலும், எதையும் வெளிப்படையாகக் கூறத் தயங்கியதாலும் உண்மையைச் கண்டறிவதில் போலீஸாருக்குப் பெரும் சவால் ஏற்பட்டது. சந்தேகத்தின் பேரில் அந்தப் பெண்ணின் தந்தையிடம் விசாரித்தபோது, அவர் தன் மீதான குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்ததோடு, வழக்குத் தொடரவும் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், முறையான ஆலோசனைகளுக்குப் பிறகு அந்த இளம்பெண் அளித்த தகவலின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவர் முதலில் கைது செய்யப்பட்டனர். ஆனால், உண்மைக் குற்றவாளியை உறுதிப்படுத்த அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் தேவைப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் தந்தை உட்பட மொத்தம் 17 சந்தேக நபர்களிடம் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி 27 ஆம் தேதி வெளியான இந்தச் சோதனையின் முடிவுகள் காவல்துறையினரை அதிர வைத்தன. மற்ற 16 பேரின் மாதிரிகளும் பொருந்தாத நிலையில், அந்த இளம்பெண்ணின் தந்தையின் மரபணு மட்டுமே கருவில் உள்ள குழந்தையுடன் 100 சதவீதம் ஒத்துப்போனது. இதன் மூலம், கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில், பாதுகாப்பு அளிக்க வேண்டிய தந்தையே தன் மகளைத் தொடர்ந்து வன்கொடுமை செய்தது அறிவியல் பூர்வமாக நிரூபணமானது.

தற்போது அந்தப் பெண்ணின் தந்தை உட்பட மூன்று பேர் இந்தக் கொடூரக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிப் பெண் என்றும் பாராமல் சொந்த மகளையே சித்ரவதை செய்த இந்த நபரின் செயல் மனிதநேயமற்ற உச்சக்கட்டமாகக் கருதப்படுகிறது. இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தேவையான சட்ட மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“மக்களுக்குத் தண்ணி கூட கொடுக்கல.. விஜய் தான் அந்த சம்பவத்திற்கு காரணம்”…. கரூரில் நடந்தது என்ன?… போட்டுடைத்த பாஜக தலைவர்…. பரபரப்பு…!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,…

1 minute ago

FLASH NEWS: ஜிவி பிரகாஷுக்கு விழுந்த அடி… இசைஞானி இளையராஜாவின் பாடலை பயன்படுத்த தடை… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு….!

இசைஞானி இளையராஜாவின் காப்புரிமை பெற்ற பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து பாய்ந்து வருகின்றன. அந்த வகையில்,…

5 minutes ago

உல்லாசப் பயணம்.. நள்ளிரவில் ரூமுக்குள் நுழைந்த பெண்…. கோவா சொகுசு லாட்ஜில் தொழிலதிபருக்கு நேர்ந்த பயங்கரம்… அம்பலமான பகீர் உண்மை….!

கர்நாடக மாநிலம் மால்பே பகுதியைச் சேர்ந்த 41 வயதான பிரபல தொழிலதிபர் சந்தீப் சாலியன், நீர் விளையாட்டு உபகரணங்களை வாடகைக்கு…

12 minutes ago

“திடீர் திருப்பம்”…. கடைசி நேரத்தில் செந்தில் பாலாஜி எடுத்த அதிரடி முடிவு…. அண்ணன் – தம்பி போட்ட ரகசிய ப்ளான்… அடுத்து நடக்கப்போவது என்ன…?

ஆட்சி கவிழ்ப்பு புகார் தொடர்பான விசாரணைக்கு செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகிய இருவருமே இதுவரை போலீசில் ஆஜராகவில்லை…

17 minutes ago

“எனக்கு வேண்டாம் அந்த நாற்காலி”…. தேடி வந்த ஆஃபரை நிராகரித்த திருமாவளவன்…. DCM விவாதத்திற்கு நடுவே பரபரப்பு..!

விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அக்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அவரது…

22 minutes ago

“டேய் ஆள மாத்தி கடத்திட்டீங்கடா…” கோவையில் அரங்கேறிய உள்ளத்தை அள்ளித்தா காமெடி…!

கோவையில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் சினிமா பாணியில் கடத்தப்பட்டு, பின்னர் கடத்தல் கும்பல் ஆளை மாற்றி கடத்தியதை உணர்ந்து அவரை…

23 minutes ago