#image_title
இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு நோயினாலும் எளிதால் கண்டுபிடிக்க முடியும். CT மற்றும் MRI ஸ்கேன்களை கொண்டு உடலை பரிசோதனை செய்யும்போது உடலில் இருக்கும் எந்த ஒரு நோயும் துல்லியமாக அது கூறிவிடும் என்று சொல்லப்படுகிறது. இந்த வகையான ஸ்கேன்களை எடுப்பது விலை சற்று அதிகம் தான். ஆனால் இவ்வளவு அதிகமான விலையை கொடுத்தும் அந்த MRI ஸ்கேன் தவறுதலாக நோய்களை கண்டறிந்தால் அது பல சிக்கல்களை விளைவிக்கும். அதுபோல் தான் தற்போது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
MRI ஸ்கேன் என்பது முழு உடலையும் பரிசோதித்து விரிவான படங்களை உருவாக்க சக்தி வாய்ந்த காந்தங்களையும் மற்றும் ரேடியோ அலைகளை பயன்படுத்தி எடுக்கும் முறையாகும். தற்போதய காலகட்டத்தில் மருத்துவர்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ முழு உடல் ஸ்கேனை எடுக்க சொல்லி அறிவுறுத்துகிறார்கள். அது செயல்முறையிலும் இருக்கிறது. ஆனால் ஒரு புதிய ஆய்வானது இந்த ஸ்கேன்களின் செயல் திறன் எவ்வாறு இருக்கும் MRI தவறாக தகவல்களை தர கூடுமா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆடாம் டெய்லர் தலைமையில் நடந்த இந்த ஆய்வில் 16,000 தன்னார்வலர்களின் மூளையை MRI ஸ்கேன் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது எல்லோரும் நம்புவதை விட MRI ஸ்கேனில் குறைவான செயல் திறன் கொண்டவை என்று கண்டபடிக்கப்பட்டது. MRI ஸ்கேன் ஒரு சிறிய சதவீத அளவில் குறிப்பிட்ட நிகழ்வுகள் மட்டுமே தவறான கண்டுபிடிப்புகளை தருகிறது என கண்டறிந்துள்ளனர். மூளைக்கு 1.4 சதவீதம், மார்புக்கு 1.3 சதவீதம், வயிற்றுக்கு 1.9% ஆகும்.
இது மட்டுமல்லாமல் ஒருவர் உடலில் எந்த பிரச்சினையும் இல்லாத போது இந்த MRI நோய் இருப்பதாக காட்டியது. ஆயிரம் மார்பக ஸ்கேன்களில் 97 தவறான தகவல்களை இந்த MRI தந்தன. ப்ரோஸ்டேட் ஸ்கேன்களில் 100 ஸ்கேன்களுக்கு 29 தவறான தகவல்களை இந்த MRI தந்து இருக்கிறது. முழு உடல் பரிசோதனை என்னதான் நல்லதான விஷயம் நோய்களை முன்னமே கண்டறிந்து விட்டால் அதற்கான சிகிச்சை எளிதாக முடிந்து விடலாம் என்று பலர் வந்தாலும் ஒரு சிலருக்கு அந்த முழு முதல் பரிசோதனை என்பது பயத்தை ஏற்படுத்தக்கூடியதாகவே தான் இருக்கிறது. இதுபோன்று இந்த MRI தவறான தகவல்களை கொடுக்கும்போது இன்னும் மக்கள் இதைக் கண்டு பயந்து கொண்டு முழு உடல் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். இதை சரி செய்ய வேண்டும் என்று ஆய்வின் முடியில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…