ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டம் சத்ரூவில் உள்ள அரசுப் பள்ளியில், பொறுப்புத் தலைமை ஆசிரியராக இருந்த காலித் உசேன் என்பவர் தனது பள்ளி மாணவியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் ஐந்து மாத கர்ப்பிணியான அந்தச் சிறுமிக்கு, ஆசிரியர் தனது சகோதரர் தாரிக் உதவியுடன் சட்டவிரோதமாக மாத்திரைகளைக் கொடுத்துக் கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார். இதன் காரணமாக உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாணவி, மேல்சிகிச்சைக்காக ஜம்மு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி கர்ப்பமாக இருந்ததை பிரேதப் பரிசோதனை முடிவுகளும் உறுதி செய்துள்ளன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நீதி கோரி அப்பகுதி மக்கள் மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டு, ஆசிரியர் மற்றும் அவரது சகோதரரைக் கைது செய்து அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றவாளி உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதக் கருக்கலைப்புக்குத் துணைபோன மருந்தக உரிமையாளர் மற்றும் தொடர்புடைய உறவினர்களிடமும் காவல்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…