கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்து பணம் கட்டிய திமுகவினர், தற்போது தங்களது பணத்தைத் திரும்பக் கேட்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவர் விஜய் மற்றும் தவெக அரசை எதிர்கொள்ள திமுக தயாராகி வரும் நிலையில், வரும் தேர்தலில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த கட்சியினர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். முன்னதாக விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15,000 முதல் ரூபாய் 25,000 வரை திமுக தலைமை நிர்ணயித்திருந்தது. பலரும் தங்களுக்குத் தொகுதி ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் ஆர்வத்துடன் இந்த தொகையைச் செலுத்தியிருந்தனர்.
இருப்பினும், தொகுதிப் பங்கீடு இறுதியான பிறகு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் விருப்ப மனு அளித்த திமுகவினருக்கு அவர்கள் செலுத்திய கட்டணம் திரும்பத் தரப்படும் என அண்ணா அறிவாலயம் ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து எந்தெந்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்குச் செல்கின்றன என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டதால், அந்தந்த தொகுதிகளில் பணம் கட்டிய திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது பணத்தை உடனே திரும்பத் தருமாறு கட்சித் தலைமையிடம் கோரிக்கை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரி திலகர் நகரைச் சேர்ந்த பியூடிஷனான ராஜமாதங்கி (25) என்பவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவர் சரவணன்…
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ஆம் தேதியன்று பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன. அன்றைய தினம்,…
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக)…
அண்ணாமலை தனி கட்சி தொடங்கியதால் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவித பின்னடைவும் இல்லை என்று தமிழக பாஜக மாநிலச் செயலாளர்…
பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, தற்போது புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியிருக்கும் அண்ணாமலை, தேசிய அரசியலில் இருந்து மீண்டும் மாநில…
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தவும், பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் தூய்மையைப் பராமரிக்கவும் தமிழ்நாடு அரசின்…