தமிழகத்திலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் கோவில்களுக்குள் நுழைந்து பயமுறுத்தும் காட்டு யானை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதன்படி கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், உணவு தேடிச்சென்ற ஒற்றை காட்டு யானை பக்தர்கள் அனைவரையும் நொடி பொழுதில் அலற வைத்தது. அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உணவுப்பொருட்களை சேதப்படுத்தி அந்த யானை கடந்த காலங்களில் வனத்துறை மூலமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை காலங்களில் கோவிலில் வந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள் அந்த யானையை பார்த்ததும் தப்பிக்க முயன்றனர். அதனை ஒரு பக்தர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். கோவிலுக்குள் யானை நுழைந்ததும் மகிழ்ந்த பக்தர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு பயத்தில் ஓட்டம் பிடித்தனர். வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலிலும் நிரந்தரமாக கும்கி யானை முகாமை அமைத்து பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…