“என் பொண்ணையே காதலிக்கிறியா?”… இளைஞரை நடுரோட்டில் துடிதுடிக்கக் கொன்ற தவெக நிர்வாகி… பரிதாபமாகப் பறிபோன உயிர்…!!

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரவீனும், அதே ஊரைச் சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகியான ஏழுமலை என்பவரின் மகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்குப் பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று பிரவீனை வழிமறித்த பெண்ணின் சித்தப்பா மணிகண்டன், காதலைக் கைவிடுமாறு மிரட்டியுள்ளார். அதற்குப் பிரவீன் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது அண்ணன் ஏழுமலை, அவரது மகன் மற்றும் நண்பர் ஒருவரை உடனடியாக அந்த இடத்திற்கு வரவழைத்துள்ளார்.

அங்கு வந்த நால்வரும் சேர்ந்து பிரவீனைச் சரமாரியாகத் தாக்கியதோடு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய அந்த இளைஞரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த பிரவீன், பலத்த காயங்கள் காரணமாக நான்கு நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து உயிரிழந்த இளைஞரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், கேளம்பாக்கம் காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகச் செயல்பட்டனர். அதன் விளைவாக, கொலையில் நேரடியாக ஈடுபட்ட ஏழுமலை, அவரது தம்பி மணிகண்டன், மகன் கௌதம் மற்றும் அவனது நண்பர் நித்திஷ் ஆகிய நான்கு பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இது திட்டமிட்ட ஆணவக் கொலையாக இருக்கலாம் எனப் பிரவீனின் உறவினர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், காவல் துறையினர் அனைத்துக் கோணங்களிலும் தங்கள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Gayathri

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

7 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

8 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

8 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

8 மணத்தியாலங்கள் ago