பீகார் மாநிலம் முங்கீர் மாவட்டம் பக்கர்பூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவரை போலீசார் மறித்துச் சோதனை செய்தனர்.
அந்த நபரின் முதுகில் பெரிய அளவிலான ஆயுதம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரின் கை, கால்களைக் கட்டி அவரிடமிருந்த ஆயுதத்தைக் கைப்பற்றினர். விசாரணையில் அது சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட நாட்டுத் துப்பாக்கி என்பது உறுதியானது.
மேலும் அந்த நபரிடமிருந்து சுமார் 30 முதல் 40 நேரடித் தோட்டாக்கள் கொண்ட பாக்கெட்டையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அந்த நபரை கைது செய்து அவருக்கு இந்த சட்டவிரோத ஆயுதம் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான கட்டுமான மேற்பார்வையாளர் கிஷோர் தனாக், தனது 5 வயது மகளைக்…
ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், தர்மவரத்தின் சிவ்நகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஊர்வலத்தின்…
புனே-சதாரா நெடுஞ்சாலையில் போர் தாலுகாவிற்கு உட்பட்ட கிக்வி பகுதியில், கவனக்குறைவாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் பினாக் சைலேந்திர…
ஹல்தவானி கம்லுவாகஞ்சா சாலையில் கடந்த செப்டம்பர் 14 அன்று மாலையில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. செவிலியர் பயிற்சி மாணவியான…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…