#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் விஜய். புகழின் உச்சியில் இருந்த போதும் பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் இவருக்காக படம் எடுக்க தயாராக இருந்த போதிலும் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று விரும்பிய விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி அரசியலில் களமிறங்க போவதாகவும் அறிவித்தார்.
அதன்படி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் தனது கட்சி கொடியையும் கட்சி பாடலையும் சமீபத்தில் வெளியிட்டார் விஜய். அதைத் தொடர்ந்து நேற்று விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. சமீபத்தில் நடந்த மாநாடுகளிலேயே அதிக மக்கள் கூடிய இடமாக இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒரு மாநாடாக விஜயின் மாநாடு மாறியது.
கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் விஜய் பேச்சை கேட்பதற்காக கூடினர். தொண்டர்களின் ஆக்கிரமிப்பால் விக்கிரவாண்டி சாலையே ஸ்தம்பித்து போய்விட்டது. அனைவருக்கும் சம உரிமை பெற வேண்டும் என்ற கொள்கையுடன் விஜய் பேசினார். நேற்றிலிருந்து இன்று வரை டுவிட்டரில் ட்ரெண்டிங்காக தமிழக வெற்றி கழகமே இருக்கிறது. விஜயை பலர் ஆதரித்தாலும் ஒரு சிலர் அவரை எதிர்த்து விமர்சனம் செய்ய தான் செய்கிறார்கள்.
அதேபோல் பத்திரிக்கையாளர் உமாபதி விஜயை பற்றி விமர்சனம் செய்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் விஜய் முதல் மாநாட்டிலேயே ஜெயலலிதாவா மாறிட்டாரு, ஏன்னா மேடையில் உட்காரும்போதே ஒவ்வொரு சேர்க்கும் இடையில் 10 அடி இடைவெளி விட்டு உட்கார்ந்தார் இதிலேயே தீண்டாமை தெரிகிறது. மேலும் அவர் மக்களை ஏமாற்றி சினிமாவை காட்டி ஓட்டு வாங்க பார்க்கிறார் என்று விமர்சனம் செய்திருக்கிறார் பத்திரிக்கையாளர் உமாபதி.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…