கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலாவைச் சேர்ந்த ஷிபு (48). இவர் அதே பகுதியில் சுற்றுலா நிறுவனம் நடத்தி வருகிறார். இது மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் தொழில் செய்து வருகிறார். வெளிநாட்டு வேலைக்கு செல்ல விசா தருவதாக கூறி ஷிபு என்னை வீட்டிற்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததார். அது மட்டும் இல்லாமல் மயங்கி நிலையில் கிடந்த என்னை வீடியோ எடுத்து மிரட்டினார் என்று இளம் பெண் ஒருவர் போலிஸில் புகார் கொடுத்துள்ளார்.
போலீசார் நடவடிக்கை எடுக்காதக் காரணத்தினால் கேரளா முதல் மந்திரி, டி.ஜி.பி மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பின் தொழிலதிபர் ஷிபு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இளம்பெண் என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளார் மிரட்டி பணம் பறிப்பதற்காகவே இப்படி செய்கிறார் என்று அப்பெண் மீது ஷிபு போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் இளம்பெண் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான தொழிலதிபர் ஷிபுவை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய அரசு பொறுப்பேற்க உள்ள சூழலில், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழா குறித்த…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் சென்னை தலைமைச் செயலகத்தில்…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை குறைத்து மதிப்பிட வேண்டாம் என தாம் ஏற்கனவே கூறியிருந்ததை கிரிஷ் சோடங்கர் மீண்டும்…
தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பேட்டி…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் 'விஜய் அலை' வீசி, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் ஆட்சியைப்…