Connect with us

CINEMA

“சினிமாவில் நடிக்கவே மாட்டேன்” என கூறிய த்ரிஷா.. இதுதான் காரணமாம்…. வைரலாகும் வீடியோ…!!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. மேலும் மாடலிங் துறையிலும் த்ரிஷா புகழ் பெற்றுள்ளார். கடந்த 1999-ஆம் ஆண்டு த்ரிஷா மிஸ் மெட்ராஸ் என்ற பட்டத்தினை வென்றுள்ளார். கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான ஜோடி திரைப்படத்தில் த்ரிஷா நடிகை சிம்ரனின் தோழியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.

   

இதனையடுத்து லேசா லேசா என்ற திரைப்படத்தின் மூலம் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்த த்ரிஷாவுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மார்க்கெட் சரிந்தது. அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் ரீ என்ட்ரி கொடுத்த த்ரிஷா மீண்டும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து த்ரிஷா விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி த்ரிஷா பிஸியாக நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு த்ரிஷாவிடம் எடுக்கப்பட்ட பேட்டியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டதாவது, எக்காரணத்தைக் கொண்டும் நான் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என நீங்கள் கூறினீர்கள். இப்போது சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த த்ரிஷா ஆமாம் நான் மாடலிங் துறையில் இருக்கும் போது சினிமாவுக்கு வரமாட்டேன் என கூறினேன். அப்போது எனக்கு என்ன வேண்டும் என்பதில் நான் தெளிவாக இல்லை. முக்கியமாக எனது படிப்பை முடித்த பிறகு தான் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும் என நினைத்தேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்குள் இருந்தது என கூறினார்.

 

View this post on Instagram

 

A post shared by Trendz media (@trendz_meadia)

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top