Connect with us

CINEMA

‘கோடிக்கணக்குல சொத்து இருக்கு.. கணக்கே இல்ல’… சொந்த ஊரில் அக்காவுடன் வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி செல்வி…

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ‘பாக்கியலட்சுமி’. ஒரு குடும்பத்தில் பெண் படும் கஷ்டங்களைப் பற்றி இந்த நாடகம் மிக அழகாக எடுத்துரைக்கிறது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியை  அவருடைய  கணவன் கோபி கொஞ்சம் கூட மதிப்பதில்லை.மேலும் ராதிகா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்தார் கோபி.

   

இப்படி சென்று கொண்டிருந்த இந்த சீரியல் தற்பொழுது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.தற்பொழுது கோபிக்கும் ராதிகாவுக்கும் பாக்கியாவின் கண் முன்னே திருமணம் நடந்து முடிந்துவிட்டது. கோபியின் அம்மா, அப்பா, குழந்தைகள் என மொத்த குடும்பமும் பாக்யாவின் பக்கமே உள்ளனர்.

தற்பொழுது ராதிகா வில்லியாக மாறி வருகிறார். இந்த சீரியலில் தற்பொழுது கோபிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டு பாக்கியா கோபியையும் அவரது மனைவி ராதிகாவையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இந்த நாடகத்தைப் பொறுத்தவரை கோபி தன் முழு  நடிப்புத் திறனையும் காட்டியுள்ளார் என்றே கூறலாம். இனி வரும் நாட்களில் கோபி என்ன செய்யப் போகிறார்? என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்த சீரியலில் செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கம்பன் மீனா.  இந்த சீரியலில் இவர் வேலைக்காரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கப்படுகிறார் .பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்துள்ளார் நடிகை கம்பம் மீனா.

இவர் இந்த சீரியலில் மட்டுமின்றி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தற்பொழுது தனது அக்காவுடன் இணைந்து தனது சொந்த ஊரான கம்பத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….

Continue Reading

More in CINEMA

To Top