Connect with us

CINEMA

இயக்குனர் மணிரத்தினம் ஐஸ்வர்யா ராய் மகளுக்கு கொடுத்த அன்பு பரிசு…. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்…..பெருமையுடன் கூறிய நடிகை…..

இயக்குனர் மணிரத்தினம் நடிகை ஐஸ்வர்யா மகளுக்கு மறக்க முடியாத அளவிற்கு ஒரு பரிசை கொடுத்துள்ளதாக நடிகை ஐஸ்வர்யா பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ‘நந்தினி’ என்ற கதாபாத்திரத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

   

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி என்று ஒரு நட்சத்திர பட்டாளமே இச்சரித்திர திரைப்படத்தில் நடித்துள்ளது. படக்குழு புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக ஹைதராபாத், மும்பை, பெங்களூர் என்று சென்று வரும் நிலையில், இந்நிகழ்ச்சிகளில் பட குழுவை சேர்ந்தவர்களும், படத்தில் நடித்த ஹீரோ ஹீரோயின்களும் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய்  பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் ‘இயக்குனர் மணிரத்தினம் சார் தனது மகள் ஆராத்யாவிற்கு வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு ஒரு பரிசு அளித்துள்ளார். இப்படத்தில் நடிப்பது அதிர்ஷ்டம் என்று அனைவரும் நினைத்துள்ளனர். அப்படி இருக்க சூட்டிங் ஸ்பாட் -க்கு வந்த ஆராத்யாவிற்கு இயக்குனர் மணிகண்டன் ஒரு நல்ல பரிசு அளித்துள்ளார்.

அதாவது ஐஸ்வர்யாவின் மகளுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரு சீன் எடுக்க ‘ஆக்சன்’ என்றும் சொல்லும் வாய்ப்பை அளித்துள்ளார் மணிரத்தினம். இதனை கூறிய ஐஸ்வர்யா ‘தன் வாழ்க்கையில் எந்த தருணத்திலும் ஆராத்யா இதை மறக்க மாட்டாள். இது மிகப்பெரிய பரிசு, அவளுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். இயக்குனர் மணிரத்தினம் அவர்களுக்கு நன்றி’ என்று கூறியுள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top