Connect with us

CINEMA

இளையராஜா இசையை வைத்து எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்… பிகு பண்ணிய செல்வமணி- அவரே சரண்டர் ஆன மொமண்ட்!

தமிழ் சினிமாவில் மட்டுமில்லை, இந்திய மற்றும்  சினிமாவிலேயே அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைததுள்ள அவர் இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.

80 களிலும் 90 களிலும் இளையராஜாவின் பாடல்களுக்காகவே ஓடிய படங்கள் அதிகம். படத்தில் என்ன இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ஐந்து பாட்டு இருக்கும். அதில் அனைத்து பாட்டுகளும் பெரும்பாலும் ஹிட்டாகிவிடும். இந்நிலையில் தன்னுடைய முதல் படமான புலன் விசாரணைக்காக இளையராஜாவிடம் சென்ற செல்வமணி, படத்துக்கு மூன்று பாடல்கள் மட்டும் போதும் என்றிருக்கிறார்.

   

இதைக்கேட்ட தயாரிப்பாளர் அதிர்ச்சியாகியுள்ளார். ஏனென்றால் அப்போது இளையராஜாவின் ஆடியோ கேசட்டுகளுக்கு பெரிய வியாபாரம் இருந்தது. ஆனால் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையாக புலன் விசாரணையை உருவாக்கி இருந்த செல்வமணிக்கு மூன்று பாடல்களே அதிகம் என்று தோன்றியுள்ளது.  படமும் மூன்று பாடல்களோடு ரிலீஸ் ஆகியுள்ளது.

அதே போல அடுத்த படமான கேப்டன் பிரபாகரன் படத்தில் இரண்டு பாடல்கள் மட்டும் போதும் என்றிருக்கிறார். அதைக் கேட்டு கடுப்பான இளையராஜா “என்னய்யா ரெண்டு பாட்டு போதும்கிற” எனக் கேட்டுள்ளார். அதற்கு செல்வமணி “சார் எல்லோரும் உங்க பாட்ட வச்சி ஏமாத்திடறாங்க. எனக்கு என் திரைக்கதை மேல நம்பிக்கை இருக்கு. அதுவே போதும் ஜெயிக்க” என கெத்தாகக் கூறியுள்ளார்.

இந்த இரண்டு படங்களுக்கு பிறகு செல்வமணி சொந்தமாக தயாரித்து இயக்கிய திரைப்படம் ‘செம்பருத்தி’. அந்த படத்தில் 8 பாடல்களை வைத்திருந்தார். அப்போது இளையராஜா “என்னய்யா இப்ப மட்டும் உன் திறமை மேல நம்பிக்கை இல்லையா” என ஜாலியாகக் கேட்டுள்ளார். அதற்கு செல்வமணி “இல்ல சார்… இப்பயும் என் திறம மேல நம்பிக்க இருக்கு. ஆனால் உங்க பாட்டு மேல காதல் அதிகமாகிடுச்சு” எனக் கூறியுள்ளார்.  இளையராஜாவின் அற்புதமான பாடல்களால் செம்பருத்தி திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

Continue Reading

More in CINEMA

To Top