Connect with us

CINEMA

பிக் பாஸில் இதுவரை பணப்பெட்டியை எடுத்த போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா..? பெரும் தொகையை தூக்கி செட்டில் ஆன பூர்ணிமா..

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 7-வது சீசனின் கடைசி வாரம் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த முறை அர்ச்சனா, விஷ்ணு அல்லது மாயா ஆகியோரில் ஒருவர் தான் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் அதிகளவு எதிர்ப்பையும், புகழையும் பெற்றது என்றால் அது மாயா மற்றும் பூர்ணிமாவும் தான். இதில் பூர்ணிமாவிற்கு அதிகப்படியான ஆதரவும் இருந்து வந்த நிலையில், அவர் 16 லட்சம் ரூபாய் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

#image_title

   

இதேப் போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்து இப்போது வரை யார் யார் பணப்பெட்டியுடன் வெளியேறினார்கள், எவ்வளவு எடுத்துக் கொண்டு சென்றார்கள் என்று பார்க்கலாம். ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதன் முதலாக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. 100 நாட்கள் இந்த நிகழ்ச்சியின் டி.ஆர்.பி உச்சத்தில் சென்றது. அதற்கு முதற் காரணம் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது எனலாம். முதல் சீசனில், ஆரவ் நஃபீஸ் டைட்டிலை வென்றிருந்தார். அதேப் போல இரண்டாவது சிசனில் ரித்திகா வென்றிந்தார். இந்த இரண்டு சீசனிலும் இடையே பணபெட்டி வைக்கும் நிகழ்வு இடம்பெறவில்லை.

#image_title

மூன்றாவது சீசனில், யூடியூப்பில் ஆல்பம் பாடல்களை வெளியிட்டு வந்த சிங்கப்பூரில் வசித்து வந்த முகேன் ராவ் டைட்டிலை வென்றிருந்த நிலையில், அதன் பிறகு பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்த சீசனின் போது 90 நாட்களுக்கு பிறகு போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதாவது ஒரு பணப்பெட்டி வைக்கப்பட்டது. விருப்பப்பட்டவர்கள் அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறலாம். அப்படி மூன்றாவது சீசனில் நடிகர் கவின் 5 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

#image_title

4-வது சீசனில், விஜய் டிவியில் நடன நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று, பின் பெரிய திரையில் சிறு சிறு கதாபாத்திரங்கள் அடித்து, தற்போது சீரியல்களிலும் நடித்து வரும் கேப்ரியல்லா பணப்பெட்டியை எடுத்து வெளியேறினார். இவரும் அந்தப் பணப்பெட்டியில் 5 லட்சம் ரூபாய் இருந்தது. 5-வது சீசனில், நடிகர் சிபி 12 லட்ச ரூபாயுடன் போட்டியிலிருந்து வெளியேறினார். 6-வது சீசனில் 2 பேர் பணப்பெட்டியை எடுத்து வெளியேறினர். முதலாவதாக தொலைக்காட்சி தொகுப்பாளர் கதிரவன் 3 லட்சம் ரூபாயுடனும், 103-வது நாளில் பணப்பெட்டிக்காக வைக்கப்பட்ட போட்டியில் தனது பொருட்கள் சிலவற்றை தியாகம் செய்து 11 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.

#image_title

7வது சீசனில் 96-வது நாள் வரையிலும் வீட்டினுள் இருந்த பூர்ணிமா ரவி, அன்று வைக்கப்பட்ட 16 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார். இந்த சீசனில் அவருக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் எனக் கூறப்படுகிறது. அப்படிப் பார்த்தால் 96 நாட்களுக்கு 19 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மற்றும் பணப்பெட்டியில் இருந்து 16 லட்சம் ரூபாய் என மொத்தம் 35லட்சம் ரூபாயுடன் அவர் பிக்பாஸில் இருந்து வெளியேறி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த சீசனில் வெற்றி பெறுபவர்களுக்கு கொடுக்கப்படும் 50 லட்சத்திலிருந்து இந்த 16 லட்சம் கழிக்கப்பட்டு 34 லட்சம் ரூபாய் தான் வழங்கப்படும் எனவும் மறுபுறம் கூறப்படுகிறது. ஆனால் அது உண்மை தானா என்பது சந்தேகம் தான்.

#image_title

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top