Connect with us

CINEMA

பெண் பார்க்கச் சென்ற வெங்கடேஷ்.. பதறி கொண்டு ஓடிய ரத்னா.. அண்ணா சீரியலில் செம ட்விஸ்ட்.. வெளியான ப்ரோமோ..!!

ஜீ தமிழில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் அண்ணா. தினந்தோறும் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்று சண்முகம், பரணி மற்றும் ரத்னா ஆகிய மூன்று பேரும் வெங்கடேஷை தேடி வந்த நிலையில் வெங்கடேஷ் குடும்பத்துடன் பெண் பார்க்க சென்று இருந்தார். இந்த நிலையில் இன்று என்ன நடக்கப் போவது என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில் இன்றைய புரோமோ வெளியாகி உள்ளது. அதில் வெங்கடேஷுக்கு பெண் காபி கொடுக்க அவர் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

   

உடனே அங்கிருப்பவர்கள் ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்க என அவரை என் அம்மாவை பாராட்ட மறுபக்கம் காரில் சண்முகம் உட்பட அனைவரும் வந்து கொண்டிருக்க பரணி டென்ஷனில் உள்ளார். அதேசமயம் விரைவில் திருமணத்தை முடித்து விடலாம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருக்க வெங்கடேஷ் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

அப்படியே இரு குடும்பத்தினரும் தட்டு மாற்றிக் கொள்ளும் போது நிறுத்துங்கள் என்று சண்முகம் கத்துகிறார். இரு குடும்பத்தினரும் இடையே மாறி மாறி சண்டை போட்டுக்கொள்ள ஒரு கட்டத்தில் வெங்கடேஷ் பார்க்கச் சென்ற பெண் அவரை வேண்டாம் என்று கூற பிறகு அனைவரும் கிளம்பி வீட்டுக்கு வந்த பிறகு வெங்கடேஷ் மற்றும் ரத்னாவிற்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். இப்படி இன்றைய எபிசோடு முடிய அது தொடர்பான ப்ரோமோவும் வெளியாகி உள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

zeetamil இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@zeetamizh)

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top