Connect with us

CINEMA

‘வீட்டிலிருந்து பாக்குறது குளமா…? இல்ல குளத்துக்குள்ள தான் வீடா..?’  தனது குடியிருப்பிலிருந்து நடிகை ரக்ஷிதா வெளியிட்ட வீடியோ வைரல்… 

‘சரவணன் மீனாட்சி’ எனும் சீரியலின் மூலம் தமிழ் மக்களின் ஆதரவை வெகுவாக பெற்றவர் நடிகை ரக்ஷிதா. இந்த சீரியலில் நடித்ததன் மூலமே ரட்சிதா என்றால் அனைவருக்கும் தெரியும் அளவிற்கு தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்கள் முன்பு வெளிச்சம் கண்டார். நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி மேகமண்டலா எனும் கன்னட சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார்.

   

இதனை அடுத்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் பிரிவோம் சந்திப்போம் எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இதற்குப் பிறகு அடுத்தடுத்த சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு இளவரசி எனும் சீரியலில் சன் டிவியில் நடித்து வந்தார்.இந்த சீரியலும் மக்களிடையே வரவேற்பை பெற்றதன் மூலம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி எனும் தொடரில் இரண்டாவது சீசனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து பிரபல சீரியல் நடிகர் ஆனார் தினேஷ் கோபால்சாமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இவர்கள் இருவருக்கும் நடுவில் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து வாங்கிச் சென்றனர். இந்த நிலையில் ரட்சிதா அவர்களுக்கு போதிய சீரியல் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் மீண்டும் பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார். தற்பொழுது இவரின் கணவரான தினேஷ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை ரக்ஷிதா. இவர் தற்பொழுது சென்னையை மிரட்டி வரும் கனமழை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் , தனது குடியிருப்பிலிருந்து குளத்தை பார்க்கிறேனா..? இல்ல குளத்துக்குள்ள தான் குடியிருப்பே இருக்கு என்பது போல , மழை நீர் தேங்கி இருக்கும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top