Connect with us

CINEMA

அப்ப கடைசியில அவரே Producer இல்லையா..? இதுக்கா இவ்ளோ பிரச்சனை பண்ணீங்க..? வைரலாக பருத்திவீரன் பட சென்சார் Certificate..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்திக். இவர் ‘பருத்திவீரன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். பருத்திவீரன் திரைப்படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை பல வருடங்களாக  இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் இடையே இன்றும் தொடர்ந்து வருகிறது .

   

இவர்களின் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் தான் உள்ளது. இந்நிலையில் திடீரென இதில் திரை பிரபலங்கள் குறுக்கிட்டு இயக்குனர் அமீருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். முக்கியமாக இத்திரைப்படத்தில் நடித்த கலைஞர்கள் ஒவ்வொருவரும் இயக்குனர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் .ஏனென்றால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டியில் அவ்வளவு தரக்குறைவாக இயக்குனர் அமீரை பேசி இருந்தார்.

இதனால் தற்பொழுது பிரபலங்கள் ஒவ்வொருவராக பொங்கி எழுந்து தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஞானவேல் ராஜா தான் பேசியதில் தவறு இருந்தால் மன்னித்து விடுமாறு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்பொழுது இதனை பார்த்த நடிகர் சமுத்திரக்கனி பொங்கி எழுந்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில் ‘இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்கு செல்லாது. நீங்க செய்ய வேண்டியது எந்த பொதுவெளியில எகத்தாளமாக உட்கார்ந்துகிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்றை வாரி இறைச்சீங்களோ, அதே பொதுவெளியில பகிரங்கமாக மன்னிப்பு கேட்கணும்.’ என்று கூறி காட்டமாக பதிலளித்திருந்தார். ஆனால் தற்பொழுது வரை நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி , சிவகுமார் குடும்பமே வாய் மூடி அமைதி காத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பருத்திவீரன் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. அதில் ஸ்டூடியோ கிரீன் பெயரோ அல்லது ஞானவேல் ராஜா-வின் பெயரோ இல்லவே இல்லை. படத்தை தயாரித்து சென்சாருக்கு அனுப்பியது இயக்குனர் அமீர் தான் என்பது தெரிய வந்திருக்கிறது. இதோ அந்த censor certificate…

Continue Reading

More in CINEMA

To Top