CINEMA
2வது திருமணம் செய்யாமல் 47 வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட நடிகை ரேவதி – அவரது வாழ்வில் மறைக்கப்பட்ட பின்னணி மர்மம் இதுதான்
கடந்த 1980களில் நடிகை ரேவதி, தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான, முன்னணி நடிகையாக நடித்தவர். வைதேகி காத்திருந்தாள், ஆண்பாவம், புன்னகை மன்னன், மண் வாசனை, உன் கண்ணில் நீர் வடிந்தால், ஒரு கைதியின் டைரி என ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துக்கொண்டு இருந்த ரேவதி, திடீரென சுரேஷ் மேனனை திருமணம் செய்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 20 தான். அதன்பிறகு சினிமாவில் நடிக்காத நிலையில், சுரேஷ் மேனனுடன் வாழ்ந்து வந்தார். திருமணமான பல ஆண்டுகள் கழிந்த நிலையில், சுரேஷ் மேனனுக்கும் ரேவதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.
சுரேஷ் மேனன் நடிகராக, இயக்குநராக இப்போதும் தமிழ் சினிமாவில் இருக்கிறார். வெப் சீரிஸ்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால், திருமணத்துக்கு பிறகு அவர் ரேவதியை சினிமாவில் நடிக்க அனுமதிக்கவில்லை. மேலும் அவர்களுக்கு குழந்தை இல்லாததும் அந்த பிரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. விவகாரத்துக்கு பிறகு ரேவதி மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால், அவர் இளம் வயதில் இருந்த போது கிடைத்த வரவேற்பும், பட வாய்ப்புகளும் இப்போது கிடைக்கவில்லை. அதனால், இளம் வயதில் திருமணம் செய்தது என்பது தவறு என அவர் பேட்டிகளில் கூறி வருகிறார்.
இந்நிலையில், ரேவதி 2வது திருமணம் செய்தததாக சில ஆண்டுகளுக்கு முன் வதந்தி பரவியது. அதை அவர் மறுத்தார். மேலும், ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார் என்றும் தகவல் பரவியது. ஆனால் அது தத்து குழந்தை அல்ல. டெஸ்ட் டியூப் மூலம் நான் பெற்ற குழந்தைதான். அம்மா அரவணைப்பில் வாழ்ந்த எனக்கு ஒரு கட்டத்தில் தாய்மை உணர்வும், எனக்கு என்று ஒரு ஆதரவும் தேவை என்று நினைத்தேன். டாக்டர்களிடம் கேட்டபோது, டெஸ்ட் டியூப் பெறும் தகுதி எனக்கு இருப்பதாக கூறியதால் என் குழந்தையை பெற்றுக்கொண்டேன், என்று கூறியிருக்கிறார் நடிகை ரேவதி.