Connect with us

CINEMA

ஒருதர்னாலே படம் சூப்பர் ஹிட்… இரண்டு பேருமா..? முதல்முறையாக ஒன்று சேர்ந்து நடிக்கவுள்ள திரிஷா- நயன்தாரா… அட ஹீரோ இவர் தானா…? 

தமிழ் சினிமாவில் முதன்முறையாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் இரண்டு நடிகைகள் என்றால் அது திரிஷாவும் , நயன்தாராவும் மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோர் தனி ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள்.

   

எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா தன்னுடைய 37 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். இவர் இறுதியாக நடிகர் விஜயுடன் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்து சக்க போடு போட்டு வருகிறது. நடிகை நயன்தாரா இவரை பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

சில பல காதல் சர்ச்சைகளில் சிக்கி இறுதியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு, வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்து தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஒருபுறம் குடும்பம், மறுபுறம் சினிமா , பிசினஸ் என பம்பரமாக சுத்தி வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக வலம் வரும் நடிகை த்ரிஷாவும், நடிகை நயன்தாராவும் ஒன்றாக இணைந்து நடித்தது கிடையாது.

தற்பொழுது முதன்முறையாக அந்த சம்பவம் நடக்க உள்ளது. அதாவது மணி ரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படம் தான் கமல் 234. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்துவிட்டது. இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்க திரிஷா மற்றும் நயன்தாரா இருவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் திரிஷா சம்பளத்தில் இருந்த அட்வான்ஸ் வாங்கிவிட்டாராம். ஆனால், நயன்தாரா நடிப்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top