கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விஜயமாநகரம் புது விளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திவாகர் என்ற 13 வயது சிறுவன், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய வடவாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த திவாகர், படிப்பில் போதிய கவனம் செலுத்தாமல் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை கண்டித்த நிலையில், பெற்றோர் மீண்டும் திட்டுவார்களோ என்ற அச்சத்தில் அதிகாலை வேளையில் பூவனூர் ரயில் நிலையம் அருகே சென்ற ரயிலின் முன் பாய்ந்து அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரயில்வே காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சிறு கண்டிப்பு, பிஞ்சு மனதைக் காயப்படுத்தி இத்தகைய விபரீத முடிவை எடுக்கத் தூண்டியிருப்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…