உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு நல்ல தூக்கம் அவசியம். ஒரு இரவு கூட சரியாகத் தூங்காவிட்டால் அடுத்த நாள் வேலை செய்ய முடியாது. ஆனால் 62 ஆண்டுகளாக ஒரு நொடி கூடக் கண் மூடி தூங்காத ஒரு மனிதர் இருக்கிறார் என்றால் நம்ப முடியுமா?
அறிவியல் படி சில நாட்களுக்கு மேல் தூக்கமின்றி உயிர் வாழ முடியாது. வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் நொகோக் (81). இவர் 1962-ஆம் ஆண்டு கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அன்றிலிருந்து இன்று வரை ஒரு நொடி கூடத் தூங்கவில்லை என்கிறார்.
1942-ல் பிறந்த நொகோக், வியட்நாம் போரின்போது 20 வயதில் அவருக்கு காய்ச்சல் வந்தது. காய்ச்சல் குணமானாலும் தூக்கம் மட்டும் திரும்பவில்லை. “மருந்து, வீட்டு வைத்தியம், மது கூட முயற்சித்தேன்… ஆனால் தூக்கம் வரவில்லை” என்கிறார்.
அதிசயம் என்னவென்றால், தூக்கமின்றியும் அவர் உயிரோடு இருப்பதோடு, பண்ணையில் வேலை செய்கிறார், வயலில் உழைக்கிறார். அவர் தூங்குவதை யாரும் பார்த்ததில்லை என மனைவி, குழந்தைகள், நண்பர்கள், அண்டை வீட்டார் அனைவரும் கூறுகின்றனர். அறிவியலுக்கு சவால் விடும் இவரது வாழ்க்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…