“அப்பா.. என்னப்பா இது?”… வெளியூர் போய்விட்டு வந்த மகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… கதவைத் தட்டிய அந்தப் பெண்.. அன்று நடந்த பகீர் சம்பவம்…!

Spread the love

சென்னை போரூர், நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் தன் மகளுடன் வசித்து வருகிறார். கோடை விடுமுறைக்காக அவருடைய மகள் கடந்த வாரம் வெளியூர் சென்றதால், முதியவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட முதியவர், தனக்கு ஏற்கனவே பழக்கமான அண்ணா நகர் சாந்தி காலனியைச் சேர்ந்த 38 வயது பூ வியாபாரம் செய்யும் பெண்ணை போனில் தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

வீட்டில் இருவரும் தனியாக இருந்த நேரத்தில், அந்தப் பெண் முதியவரின் கவனத்தை நைசாக திசை திருப்பியுள்ளார். முதியவர் கவனிக்காத சமையத்தில், வீட்டின் பீரோவைத் திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 6½ பவுன் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு அங்கிருந்து அவசரமாகக் கிளம்பிச் சென்றுவிட்டார். நகைகள் களவு போன விஷயம் ஆரம்பத்தில் முதியவருக்குத் தெரியவில்லை; பின்னர் தெரிந்தபோதும், மகளுக்குப் பயந்து இந்த விவகாரத்தை அவர் மறைத்துவிட்டார்.

வெளியூர் சென்றிருந்த மகள் நேற்று வீடு திரும்பியபோது, ஒரு விசேஷத்திற்காக நகை எடுக்க பீரோவைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது நகைகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தந்தையிடம் கேட்டுள்ளார். ஆரம்பத்தில் முதியவர் உண்மையை மறைத்து, வீட்டு வேலைக்கு ஒரு பெண் வந்ததாகக் கூறி சமாளித்துள்ளார். ஆனால், மகள் விடாப்பிடியாகக் காரசாரமாகக் கேட்டதால், முதியவர் நடந்த உண்மைகளை ஒப்புக்கொண்டார்.

இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த மகள் உடனடியாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி சாந்தி காலனியைச் சேர்ந்த அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். சென்னை போன்ற பெருநகரங்களில் தனிமையில் இருக்கும் முதியவர்களைக் குறிவைத்து, நயவஞ்சக வார்த்தைகளால் ஏமாற்றித் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், முதியவர்களை வீட்டில் தனியாக விடும்போது குடும்பத்தினர் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் போலீசாரும் எச்சரிக்கின்றனர்.

Nanthini

Recent Posts

த்ரிஷாவுக்கு அடித்த மெகா ஜாக்பாட்!… உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அதிரடி ஆஃபர்… பின்னணியில் இருக்கும் அரசியல் பிளான் என்ன?… ஷாக்கில் சினிமா உலகம்…!!!

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா கிருஷ்ணன், அரசியல்வாதியும் திரைப்பட தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் பின்னணியில் தயாராகும் ஒரு…

2 minutes ago

உஷார்..! உணவக QR கோடில் ஒளிந்திருக்கும் ஆபத்து.. ஹோட்டலில் அரங்கேறிய சம்பவம்.! இளம்பெண்ணை அலறவிட்ட ஊழியரின் வாட்ஸ்அப் மெசேஜ்..!!

புனேவில் உள்ள பிரபல ‘சோஷியல்’ (Social) உணவகத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரபல இன்ஃப்ளூயன்ஸரான ரிஷிகா தத்தா என்பவர்,…

13 minutes ago

கணவன் – மனைவிக்குள் வெடித்த சண்டை… 5 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்… பெற்ற தந்தையே செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்… ஆந்திராவில் பெரும் சோக சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கோருகொண்ட மண்டலத்திற்குட்பட்ட காதராடா கிராமத்தைச் சேர்ந்த ராமவரபு ராஜு என்பவருக்கும், அவரது மனைவிக்கும்…

14 minutes ago

“இந்தியா – அமீரகம் ‘மெகா’ டீல்.. 30 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்”… அபுதாபியில் மோடி அடித்த அசுர வேட்டை… அரண்டு போன உலக நாடுகள்…!!!

பிரதமர் நரேந்திர மோடியின் அபுதாபி பயணத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஒரு "முக்கிய…

24 minutes ago

நெஞ்சை உலுக்கும் சோகம்..! மாமனார் இறந்த அதிர்ச்சியில் உயிரை விட்ட மருமகள்… ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து இரு மரணங்கள்..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள பாஸ்னி மனணா கிராமத்தில், சசுரார் (மாமனார்) இறந்த அதிர்ச்சியில் மருமகள் உயிரிழந்த நெகிழ்ச்சியான மற்றும்…

27 minutes ago

“அதிமுக பிளவுக்கு காரணம் என்ன? … மேட்டூர் MLA போட்டு உடைத்த ரகசியம்… பரபரக்கும் அரசியல் களம்”…!!!

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) விளக்கம் கேட்டதால், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான…

32 minutes ago