தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக தவெக ஆட்சியைப் பிடித்துள்ள சூழலில், டெல்லி அரசியலிலும் தடம் பதிக்க அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டு வருகிறார். 2029 மக்களவைத் தேர்தல் வரை தவெகவால் நாடாளுமன்றத்தின் கீழ் சபைக்குச் செல்ல முடியாது என்பதால், ராஜ்ய சபா மூலம் டெல்லியில் தங்களின் குரலை ஒலிக்கச் செய்ய தவெக தலைமை முனைப்பு காட்டி வருகிறது. அதிமுகவின் சி.வி.சண்முகம் தனது ராஜ்ய சபா பதவியை ராஜினாமா செய்துள்ளதாலும், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவாலும் தவெகவிற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. ஒரு ராஜ்ய சபா உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ் மற்றும் விசிக, சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகளின் ஆதரவோடு தவெக தனது முதல் ராஜ்ய சபா பிரதிநிதியை அனுப்ப முழு வீச்சில் தயாராகி வருகிறது.
இந்த முக்கியப் பொறுப்பிற்கு தமிழகத்தின் முன்னணி நடிகையான திரிஷாவின் பெயர் தவெக தரப்பில் பலமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவர் விஜய்யின் மிக நம்பிக்கைக்குரிய நபராகப் பார்க்கப்படும் திரிஷா, டெல்லியில் கட்சியின் முக்கியப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் முகமாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. திரிஷாவின் சமூகப் பின்னணியும், தேசிய அளவில் அவருக்கு இருக்கும் பரவலான அடையாளமும் இதற்கு முக்கியக் காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. ஏற்கனவே அரசியலில் தனக்கு ஆர்வம் இருப்பதாக திரிஷா தெரிவித்திருந்த நிலையில், அவர் சமீபகாலமாக புதிய திரைப்படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் இருப்பது இந்த அரசியல் என்ட்ரி வதந்திகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
வரலாற்று ரீதியாக தமிழகத்தை ஆண்ட முக்கியக் கட்சித் தலைவர்கள் அனைவரும் டெல்லியில் தங்களுக்கு என ஒரு நம்பிக்கைக்குரிய ‘முகத்தை’ வைத்திருந்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முரசொலி மாறனும், மு.க.ஸ்டாலினுக்கு டி.ஆர்.பாலு மற்றும் கனிமொழியும், எடப்பாடி பழனிசாமிக்கு தம்பிதுரையும் டெல்லி பிரதிநிதிகளாகச் செயல்பட்டனர். குறிப்பாக, 1984-ல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தனக்கு நம்பிக்கையான ஜெயலலிதாவை ராஜ்ய சபாவுக்கு அனுப்பியபோது, பேரறிஞர் அண்ணா அமர்ந்த 185-வது இருக்கை அவருக்கு வழங்கப்பட்டது. அதே பாணியில், தற்போது தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனக்கு மிகவும் நெருக்கமான நடிகை திரிஷாவை டெல்லிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
விஜய் மற்றும் திரிஷாவுக்கு இடையே இருக்கும் நீண்டகால நட்பு மற்றும் புரிதல் இந்த முடிவுக்கு முக்கியக் காரணியாக அமையலாம். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒரு திருமண நிகழ்ச்சியில் இருவரும் ஒரே டிசைனில் ஆடை அணிந்து பங்கேற்றது, தவெக வெற்றி பெற்ற பிறகு விஜய் வீட்டிற்கு திரிஷா நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தது மற்றும் விஜய் முதல்வராகப் பதவியேற்ற விழாவில் திரிஷா கலந்துகொண்டது என இவர்களின் நெருக்கம் தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது. தனது கார் ஓட்டுநரின் மகனான சபரிநாதனை தமிழக அரசின் தலைமை கொறடாவாக நியமித்து, தனக்கு விசுவாசமானவர்களுக்கே முக்கியப் பொறுப்புகள் என்பதை விஜய் நிரூபித்துள்ளார். அதே நம்பிக்கையின் அடிப்படையில், டெல்லி அரசியலைக் கையாள திரிஷாவிற்கு மிக விரைவில் தவெக சார்பில் ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
விமானம் முழுமையாகத் தரையிறங்கும் வரை பயணிகள் அனைவரும் தங்களது இருக்கைகளில் அமர்ந்திருக்குமாறு அறிவுறுத்தப்படுவது வழக்கமான பாதுகாப்பு விதிமுறையாகும். இருப்பினும், சில…
திமுக தொண்டரணியின் மாநில இணைச் செயலாளராக இருந்த காயத்ரி சீனிவாஸ், தவெகவின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான கே.ஏ.எஸ். (KAS) முன்னிலையில்…
பொதுத்தேர்வு முடிவுகள் ஒரு மாணவனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகக் கருதப்பட்டாலும், அது ஒரு குழந்தையின் வாழ்க்கையை விடவும், சுயமரியாதையை…
பீகார் மாநிலம் சசாரம் மாவட்டத்தில் உள்ள பைலட் பாபா தாம் அருகே நடைபெற்ற லண்டன் கருப்பொருள் திருவிழாவில், வெள்ளிக்கிழமை இரவு…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவின் எஸ்பி வேலுமணி தரப்பைச்…
தமிழகத்தின் மிக முக்கிய ரயில் போக்குவரத்து தமனியாக விளங்கும் சென்னை - திருச்சி வழித்தடத்தில், ரயில்களின் வேகத்தை அதிகரித்து பயண…