புனேவில் உள்ள பிரபல ‘சோஷியல்’ (Social) உணவகத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரபல இன்ஃப்ளூயன்ஸரான ரிஷிகா தத்தா என்பவர், அங்குள்ள மேஜையில் இருந்த QR கோடை உணவக மெனுவைப் பார்ப்பதற்காக ஸ்கேன் செய்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, அவர் ஸ்கேன் செய்த அடுத்த கணமே அவருடைய தனிப்பட்ட மொபைல் எண் உணவக ஊழியர்களின் கைக்குச் சென்றுள்ளது. டிஜிட்டல் வசதி என்ற பெயரில் நமது தனியுரிமை எந்த அளவிற்கு ஆபத்தில் உள்ளது என்பதற்கு இதுவொரு சான்றாகும்.
தனது கைக்கு எண் கிடைத்தவுடன், அந்த உணவக ஊழியர்களில் ஒருவன் ரிஷிகாவிற்கு வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகளை (Messages) அனுப்பத் தொடங்கியுள்ளான். ஒருகட்டத்தில் வரம்பு மீறி, சாட்டில் அவளது வயதையும் கேட்டுள்ளான். இதுகுறித்து ரிஷிகா கூறுகையில், “நல்லவேளையாக அவனுக்கு என் வீட்டு முகவரி தெரியவில்லை, தெரிந்திருந்தால் என் வீட்டு வாசலுக்கே வந்திருப்பான்” என்று பயத்துடன் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ரிஷிகா உடனடியாக உணவக நிர்வாகத்திடம் புகார் அளித்தார். புகாரை அடுத்து, உடனடியாகச் செயல்பட்ட உணவக நிர்வாகம் அந்த ஒழுங்கீனமான ஊழியரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தற்பொழுது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் உணவகங்களுக்குச் செல்லும்போது அவசரப்பட்டு QR கோடுகளை ஸ்கேன் செய்வதற்கு முன்னால், நமது பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்து சிந்திப்பது அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.
திமுக தொண்டரணியின் மாநில இணைச் செயலாளராக இருந்த காயத்ரி சீனிவாஸ், தவெகவின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான கே.ஏ.எஸ். (KAS) முன்னிலையில்…
பொதுத்தேர்வு முடிவுகள் ஒரு மாணவனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகக் கருதப்பட்டாலும், அது ஒரு குழந்தையின் வாழ்க்கையை விடவும், சுயமரியாதையை…
பீகார் மாநிலம் சசாரம் மாவட்டத்தில் உள்ள பைலட் பாபா தாம் அருகே நடைபெற்ற லண்டன் கருப்பொருள் திருவிழாவில், வெள்ளிக்கிழமை இரவு…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவின் எஸ்பி வேலுமணி தரப்பைச்…
தமிழகத்தின் மிக முக்கிய ரயில் போக்குவரத்து தமனியாக விளங்கும் சென்னை - திருச்சி வழித்தடத்தில், ரயில்களின் வேகத்தை அதிகரித்து பயண…
ரவீந்திரா தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு தொடர் சட்டப் போராட்டத்தில் சிக்கித் தவித்து வந்தார்.…