சென்னை மாநகராட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2026-2027ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், மேயர் பிரியா ராஜன் அறிவித்த திட்டங்களில் பெரும் நிதி முறைகேடு நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சியின் கீழ் இயங்கும் 100 பள்ளிகளுக்குப் பிரிண்டர் மிஷின்கள் வாங்க ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு அதே எண்ணிக்கையிலான பிரிண்டர்களை வெறும் ரூ.22.12 லட்சத்தில் வாங்கிக் கொடுத்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.37.78 லட்சம் மீதமாகியிருப்பதுடன், முந்தைய பட்ஜெட்டில் சந்தை விலையை விட சுமார் 60 சதவீதம் வரை கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது அம்பலமாகி, மேயர் பிரியாவுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
இந்த பிரிண்டர் விவகாரத்தை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 90 புதிய திட்டங்களின் மதிப்பீடுகளிலும் இதே போன்ற குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதன் பின்னணியில், கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டுத் தொடங்கப்படாமல் இருக்கும் அனைத்துத் திட்டங்களின் திட்ட மதிப்பீட்டையும் உடனடியாக மறு ஆய்வு செய்யுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி ஆய்வால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் முந்தைய ஆளுங்கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சி அலை பரவியுள்ளது.
விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வெளிப்படைத்தன்மையையும் ஊழலற்ற நிர்வாகத்தையும் உறுதி செய்ய தவெக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சியைத் தொடர்ந்து, மாநிலத்தின் பிற உள்ளாட்சி அமைப்புகளிலும் மேற்கொள்ளப்பட்ட திட்ட மதிப்பீடுகளை ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதால், அடுத்தடுத்து பல்வேறு நிதி முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்-அமைச்சரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.…
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த கோமல் மிஸ்ரா (20) என்ற பெண் அழகுக்கலைஞர், தமக்கு ஏற்பட்ட தொடர்…
உத்தரப் பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தில் உள்ள வஜீர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவருக்குப் பொறித்த உணவுகள் என்றால் மிகவும்…
பெங்களூருவின் சல்லகட்டா பகுதியில் வசித்து வந்த 61 வயதான ஜெயம்மா என்ற மூதாட்டி, கடந்த ஜூலை 15 முதல் காணாமல்…
தமிழ்நாடு முழுவதும் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பயோமெட்ரிக் (கைரேகை அல்லது கருவிழி)…
காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையில் மீண்டும் ஒரு பெரும் சிக்கல் உருவாகி, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…