“இதெல்லாம் என்ன கணக்கு பிரியா மேடம்?…” பிரிண்டர் வாங்குறதுக்கு இத்தனை லட்சமா?… சைலண்டாக தூண்டில் போட்ட விஜய்… ஆடிப்போன சென்னை மாநகராட்சி… வெளியான அதிரடி உத்தரவு…!

By Visaka on ஆடி 22, 2026

Spread the love

சென்னை மாநகராட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2026-2027ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், மேயர் பிரியா ராஜன் அறிவித்த திட்டங்களில் பெரும் நிதி முறைகேடு நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சியின் கீழ் இயங்கும் 100 பள்ளிகளுக்குப் பிரிண்டர் மிஷின்கள் வாங்க ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு அதே எண்ணிக்கையிலான பிரிண்டர்களை வெறும் ரூ.22.12 லட்சத்தில் வாங்கிக் கொடுத்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.37.78 லட்சம் மீதமாகியிருப்பதுடன், முந்தைய பட்ஜெட்டில் சந்தை விலையை விட சுமார் 60 சதவீதம் வரை கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது அம்பலமாகி, மேயர் பிரியாவுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

இந்த பிரிண்டர் விவகாரத்தை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 90 புதிய திட்டங்களின் மதிப்பீடுகளிலும் இதே போன்ற குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதன் பின்னணியில், கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டுத் தொடங்கப்படாமல் இருக்கும் அனைத்துத் திட்டங்களின் திட்ட மதிப்பீட்டையும் உடனடியாக மறு ஆய்வு செய்யுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி ஆய்வால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் முந்தைய ஆளுங்கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சி அலை பரவியுள்ளது.

   

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வெளிப்படைத்தன்மையையும் ஊழலற்ற நிர்வாகத்தையும் உறுதி செய்ய தவெக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சியைத் தொடர்ந்து, மாநிலத்தின் பிற உள்ளாட்சி அமைப்புகளிலும் மேற்கொள்ளப்பட்ட திட்ட மதிப்பீடுகளை ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதால், அடுத்தடுத்து பல்வேறு நிதி முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.