சங்காரெட்டி மாவட்டம், பட்டான்செரு மண்டலத்திற்கு உட்பட்ட இந்திரேசம் நகராட்சி எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது பெத்த கஞ்சர்லா கிராமம். இக்கிராமத்தில் உள்ள சிரிஷா ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைப்பதற்காக உற்சாகத்துடன் சென்றுள்ளனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அருகே இருந்த திறந்தவெளி கிணற்றில் ஆறு மாணவர்கள் தவறி விழுந்தனர். இந்தத் திடீர் விபத்தால் அதிர்ச்சியடைந்த மற்றவர்கள் காப்பாற்ற முயன்றும் இயலாமல் போகவே, விசர்ஜன நிகழ்வு சோகத்தில் முடிந்தது. நீரில் மூழ்கிய ஆறு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
https://twitter.com/TeluguScribe/status/2100236086425628754/video/1
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மாணவர்களின் உடல்களை மீட்புக் குழுவினரின் உதவியோடு மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே காப்பகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் பலியான இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், 16 வயது சிறுமி ஒருவருக்குச் சிகரெட்டில் கஞ்சா மற்றும் போதை மருந்துகளைக் கலந்து கொடுத்து, சிறுவர்கள்…
லக்கிம்பூர் கேரியில் மோசமான சாலை நிலையைச் கண்டித்தும், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு எதிராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைதியான முறையில் தர்ணா…
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவுக்கு தமிழ் மாநில முஸ்லிம்…
மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிக்குழுப் பட்டியலில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருக்கும் சரத்குமாரின்…
அதிமுக இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகிய முக்கிய…
ஒரு வாரத்திற்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த VS பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…