லக்கிம்பூர் கேரியில் மோசமான சாலை நிலையைச் கண்டித்தும், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு எதிராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைதியான முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது இரக்கமின்றி தடியடி நடத்தி அவர்களைத் தாக்கியுள்ளனர்.
இந்த தடியடியின் போது ஐந்து வயது சிறுவன் ஒருவன் மிகக் கொடூரமான முறையில் காயமடைந்தான். அவனது காயம் தீவிரமடைந்து, பாதிக்கப்பட்ட பகுதி சுண்டக்காய் அளவில் இருந்து பெரிய கொய்யாப்பழ அளவிற்கு வீங்கியுள்ளது. மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் வீக்கம் குறையாமல் அச்சிறுவன் கடும் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறான்.
https://twitter.com/Abhimanyu1305/status/2100165255930446042/video/1
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்களது உடலில் உள்ள காயங்களை சுட்டிக்காட்டி, அங்கு ஒரே ஒரு பெண் காவலர் கூட இல்லை என்றும், அனைவரும் ஆண் காவலர்கள்தான் என்றும் குற்றம் சாட்டினர். தௌரஹ்ரா சட்டமன்ற உறுப்பினரின் உத்தரவின் பேரிலேயே தங்களை ஆண் காவலர்கள் விரட்டி விரட்டித் தாக்கியதாக அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மல்லுபுரா காவல் எல்லைக்குட்பட்ட தனௌலி மயானம் அருகே உள்ள சாக்கடையில், வாலிபர் ஒருவரின் சடலம்…
பீகாரில் வீதியோரம் காரப்பொறி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரி ஒருவரை, நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும்…
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில்…
காசா நகரத்தின் தல் அல்-ஹவா பகுதியில், இஸ்ரேலின் முந்தைய வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகச் சேதமடைந்திருந்த ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம்…
குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்க்கேஜ் பகுதியில், 17 வயது பிளஸ் 2 பள்ளி மாணவி ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக…
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்த உறவினர்கள் சிலர், 67 வயதான முன்னாள் ராணுவ…