“என் பிள்ளையை நானே கொன்னுட்டேனே” மனைவிக்கு வாங்கி வந்த ORS மருந்து… 4 வயது மகனுக்கும் கொடுத்ததால் மரணம்… கதறி அழும் தந்தை…!!

Spread the love

உத்திரபிரதேசம் கான்பூர் மதையாபூர்வா நியூ காலனியைச் சேர்ந்த ஆஷு ராஜ்புத் என்பவர் தட்டு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். இவருடைய  மனைவி மோகினிக்கு உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்ததால்  ஒரு மருத்துவக் கடையில் இருந்து மருந்து மற்றும் எலக்ட்ரோலைட்டை வாங்கினார். முதலில் எலக்ட்ரோலைட்டை ஒரு பாட்டிலில் கரைத்து, மனைவிக்கு ஒரு கிளாஸ் எலக்ட்ரோலைட்டைக் கொடுத்து, பின்னர் அதை அவரும் குடித்தார். பின்னர் அதே எலக்ட்ரோலைட் கரைசலை தனது மகன் கிருஷ்ணா ராஜ்புத்துக்கு (4) கொடுத்தார்.  கரைசலைக் குடித்த பிறகு,  ஆஷு வேளைக்கு கிளம்பியுள்ளார்.

சிறிது நேரத்திலேயே, ஆஷுவைத் தவிர மற்ற அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவர்கள் அதிக அளவில் வாந்தி எடுக்கத் தொடங்கினர், மேலும் அவர்களின் நிலை மோசமடைந்தது. அவரது மனைவி உடனடியாக ஆஷுவுக்குத் தகவல் கொடுத்தார். ஆஷு உடனடியாக வீடு திரும்பி  அனைவரையும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் மருத்துவமனையில், கிருஷ்ணா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் .

அவரது மனைவி மோகினி மற்றும் மருமகன் ககன் ஆகியோர் இன்னும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் கிடைத்ததும், காகதேவ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இந்த விஷயத்தை விசாரிக்கத் தொடங்கினர். இந்நிலையில் மூத்த குழந்தை மருத்துவர் டாக்டர் ராஜன் காந்தி, எலக்ட்ரோலைட்டுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது  என்றும், நீரிழப்பு ஒரு பிரச்சனையாக இருந்தால் மட்டுமே எலக்ட்ரோலைட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவரை அணுகாமல் எலக்ட்ரோலைட்டுகளை எடுத்துக்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

17 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

43 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

54 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

1 மணத்தியாலம் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

1 மணத்தியாலம் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

1 மணத்தியாலம் ago