தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும் போட்டி நிலவிய நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் சமீபத்தில் அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்ததால் அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில முக்கிய நிர்வாகிகளும் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு நாளுக்கு நாள் பலம் கூடிக் கொண்டே செல்கிறது. இப்படியான நிலையில் புதுச்சேரியில் தன்னுடைய அரசியல் ஆட்டத்தை தமிழக வெற்றிக்கழகம் ஆடி வருகிறது. இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் புதுச்சேரியில் போட்டியிட திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி உப்பளத்தில் ஆனந்த் போட்டியிடலாம் என பேசப்படும் நிலையில் ஆதம் அர்ஜுனா எந்த தொகுதியை குறி வைக்கிறார் என்பதை பற்றிய தகவல்கள் கசியவில்லை. ஆனால் சார்லஸ் மார்ட்டினுக்கு எதிராக இவர் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…
மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…