நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் விஜய் வரும் 11-ம் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். கடந்த மாதம் 10-ஆம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்ற அவர், முறைப்படி பிரதமரைச் சந்திக்க மே 27 அன்று டெல்லி சென்றிருந்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற 10 நிமிடச் சந்திப்பில், மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த 4 முக்கியக் கோரிக்கைகளை அவர் முன்வைத்தார். மேலும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து மாநிலத்திற்கான நிதி சார்ந்த கோரிக்கைகளை சமர்ப்பித்தார்.
எனினும், கடந்த டெல்லி பயணத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க முதல்வர் விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டும், அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அதேபோல, தமிழகத்தில் ஆளுங்கட்சியின் முக்கியக் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர்களையும் அவர் சந்திக்காமல் தமிழகம் திரும்பினார். கூட்டணித் தலைவர்களை விஜய் புறக்கணிக்கிறாரா அல்லது காங்கிரஸ் தலைமை அவரைச் சந்திக்க விரும்பவில்லையா என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறிய பின்னணியில் இந்த அடுத்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் வரும் 11-ம் தேதி நடைபெறவிருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் விஜய் மீண்டும் டெல்லி செல்லவிருக்கிறார். மாநில முன்னேற்றத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிப்பதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் இக்கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்துகொள்கின்றனர். இந்த முறை டெல்லி செல்லும் போது, கடந்த முறை விடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரையும் முதல்வர் விஜய் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவற்றுடன், கடந்த பயணத்தின் போதே டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்வர் விஜய் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு, பின்னர் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. எனவே, வரவிருக்கும் இந்த 11-ம் தேதி பயணத்தின் போதாவது திருவள்ளுவர் சிலை திறக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் வேளையில், முதல்வர் விஜய்யின் இந்த இரண்டாவது டெல்லி பயணம் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தற்போதைய அரசியல் களம் பெரும் அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில்…
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ஏ.ஜி.சம்பத், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக…
கடந்த 2011 - 16ஆம் ஆண்டு காலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக எழுந்த புகாரின்…
தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ரகசியப்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த மிதுன் (27) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போக்கன் குமாரி (25) ஆகிய…
உத்தரகாண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிதால் வீதிகளில், ஒரு சிறுவன் பொதுமக்களுக்கு முன்னால் அசாத்தியமான மேஜிக் வித்தைகளைக் காட்டும் வீடியோ…