தமிழக அரசியல் களம் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிரடி அரசியல் வியூகங்களால் பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, ஐ.யு.எம்.எல் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்தது. தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க பல்வேறு அரசியல் சதுரங்க ஆட்டங்களை ஆடி வரும் முதலமைச்சர் விஜய், தற்போது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை குறிவைத்து “ஆபரேஷன்” ஒன்றை மிகத் தீவிரமாக அரங்கேற்றி வருவது அண்மைக்கால நகர்வுகள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
இதற்கு முன்னதாக, அதிமுகவின் முக்கியப் புள்ளிகளான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான அணியினரை தவெக அரசுக்கு ஆதரவளிக்கச் செய்து அரசியல் வட்டாரத்தை அதிரவைத்தார் விஜய். அதன் தொடர்ச்சியாக, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். சமீபத்தில் எஸ்.பி. வேலுமணி மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமைக்குத் திரும்பியிருந்தாலும், சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் போன்றோர் இன்னும் தாய் கழகத்திற்குத் திரும்பாமல் அமைதி காப்பது அதிமுகவிற்குத் தொடர் தலைவலியாகவே இருந்து வருகிறது.
இத்தகைய பரபரப்பான சூழலில், சமீபத்தில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, இன்று மேலும் 5 முக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணையப் போவதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் மிக முக்கியமான முகங்களாக வலம் வந்த முன்னாள் அமைச்சர்களான எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் பெஞ்சமின் ஆகிய 5 பேரும் இன்று காலை சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று, முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுக கூடாரமே வெலவெலத்துத் தவிக்கிறது.
முன்னாள் அமைச்சர்கள் மட்டுமன்றி, மாவட்ட அளவிலான வலுவான தூண்களும் தவெக பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, அதிமுகவின் தர்மபுரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், பாப்பிரெட்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கோவிந்தசாமி மற்றும் சிவன் ஆகியோர் தலைமையில் மேலும் 5 முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் இன்று பனையூர் அலுவலகத்தில் தவெகவில் இணையவுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் திடீர் அரசியல் மாற்றங்கள், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை மொத்தமாகப் பலவீனப்படுத்தும் தவெகவின் திட்டமா அல்லது தங்களின் ஆட்சியைத் தொய்வின்றி நகர்த்துவதற்கான முதலமைச்சரின் வியூகமா என்ற விவாதம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ஏ.ஜி.சம்பத், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக…
கடந்த 2011 - 16ஆம் ஆண்டு காலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக எழுந்த புகாரின்…
தமிழகத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ரகசியப்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த மிதுன் (27) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போக்கன் குமாரி (25) ஆகிய…
உத்தரகாண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிதால் வீதிகளில், ஒரு சிறுவன் பொதுமக்களுக்கு முன்னால் அசாத்தியமான மேஜிக் வித்தைகளைக் காட்டும் வீடியோ…
பிரபல கல்வி பயிற்சியாளரான கான் சார் (Khan Sir) மற்றும் அவரது பயிற்சி மையம் குறித்த உண்மைகளை மாணவி ஒருவர்…