குடிப்பழக்கத்தை மறப்பதற்காக நாட்டு மருந்து… போலி வைத்தியரால் பெண் உட்பட 4 பேர் பலி… பெரும் சோக சம்பவம்..!

Spread the love

கர்நாடகா மாநிலத்தில் கலபுரகி மாவட்டம் சேடம் தாலுக்கா கிராமத்தை சேர்ந்தவர் சாயப்பா என்ற தாயப்பா . இவர் அந்த ஊரில் நாட்டு வைத்தியராக இருந்துள்ளார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு நாட்டு மருந்துகள் கொடுத்து வந்துள்ளார் . அதன்படி சேடம்  அருகே புகரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமி, சித்தார்புரா  தாலுகா பீமனஹள்ளியை சேர்ந்த மனோகர், சகாபாத் டவுனை சேர்ந்த கணேஷ் ராத்தோட், நாகேஷ் ஆகிய நான்கு பேரும் இமடா புரா கிராமத்திற்கு நேற்று முன்தினம் வந்துள்ளனர். பின்னர் குடிப்பழக்கத்தை மறப்பதற்காக சாயப்பா கொடுத்த மருந்தை நான்கு பேரும் குடித்துள்ளனர். அதே நேரத்தில் நான்கு பேருக்கும் மூக்கு வழியாகவும் மருந்து கொடுத்து உள்ளார் சாயப்பா.

திடீரென்று, நான்கு பேரும் வாந்தி , மயக்கம் உள்ளிட்ட உடல்நல கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர் . உடனடியாக நான்கு பேரையும் அருகில் இருந்த அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார் சாயப்பா. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவே லட்சுமியும், கணேஷ் ராத்தோட் என்பவரும் உயிரிழந்தனர். மேலும் மனோகர், நாகேஷுக்கும்  தீவிர சிகிக்சை  அளித்து வந்தது. ஆனாலும் இருவருமே நேற்று அதிகாலை உயிரிழந்தார்கள்.

நாட்டு வைத்திய சாயப்பாவின் மருந்தை குடித்த 4 பேருமே பலியாகி விட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இதைக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன . விசாரணையில் சாயப்பா ஒரு போலி வைத்தியர் என்று தெரியவந்துள்ளது. இதை அடுத்து போலி வைத்தியரான சாயப்பாவை  கைது செய்ய முடிவெடுத்தனர். ஆனால் சாய்ப்பாவோ தலைமறைவாய்விட்டார். போலீசாருக்கு தெலுங்கானா மாவட்டத்தில் சாயப்பா தலைமறைவாக உள்ளது தெரியவந்தது . விரைவாக கிளம்பிய போலீசார் சாய் அப்பாவை அவரது தங்கையின் வீட்டில் இருந்து கைது செய்துள்ளனர். சாயப்பாவை விசாரணை நடத்தி வருகின்றன சாயப்பா கொடுத்த நாட்டு மருந்து விஷமாகி 4 பேர் பலியானதை தொடர்ந்து பிரேத பரிசோதனையில் சரியான காரணம் எதுவும் தெரியவில்லை  என்று போலீசார் தெரிவித்துள்ளனர்..

Divyamayakannan

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

2 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

3 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

3 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

3 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

3 மணத்தியாலங்கள் ago