“முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில்”, ரூ. 5 லட்சம் வரையிலான சிகிச்சைக்கு, இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் சிகிச்சைக்கு நிதி தேவைப்பட்டால், முதலமைச்சருக்கு மனு அளிப்பதன் மூலம் ரூ. 30 லட்சம் வரை நிதி உதவி கிடைக்கும். இத்திட்டத்தில் அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய் சிகிச்சை, மாரடைப்பு சிகிச்சை, கர்ப்பப்பை கட்டிகள் சிகிச்சை, விபத்து எலும்பு முறிவு சிகிச்சை போன்ற சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ. 1,20,000 கீழ் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் பயனடையலாம். இத்திட்டத்தை உபயோகிக்க, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை மிகவும் அவசியம்.
இதேபோல் மத்திய அரசின் “பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய யோஜனா திட்டம்” செயல்பட்டு வருகிறது. இவ்விரண்டு திட்டத்திலும் இணைந்து, ஒரு குடும்பம் சராசரியாக 5 வருடத்திற்கு ரூ. 10 லட்சம் மருத்துவ காப்பீடாக பெற முடியும். சிகிச்சைக்கான மருத்துவ பட்டியல், சிகிச்சை முறைகள், தொடர் சிகிச்சை வழிமுறைகள், பரிசோதனை முறைகள், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் போன்றவை ஒவ்வொரு வருடத்திற்கும் திருத்தப்பட்டு வெளியிடப்படுகிறது. இத்திட்டத்தில் இணைய ரேஷன் கார்டு நகல், குடும்ப உறுப்பினரின் ஆதார் நகல், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துச் சென்று அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது “உங்களுடன் ஸ்டாலின்” முகம் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, முதல்வர் காப்பீடு திட்டத்தின் பயன்களை பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தார்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…