அதிமுகவில் அடுத்த பூகம்பம்… எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு… கதறும் 25 எம்.எல்.ஏ.க்கள்… அதிர்ச்சியில் தமிழக அரசியல்…!

Spread the love

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தற்போது இரு பிரிவுகளாக உடைந்து அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மற்றொரு அணியும் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றன. கடந்த மே 13ஆம் தேதி சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், கட்சியின் கொறடா உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால் இந்த பிளவு தற்போது பகிரங்கமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி வேலுமணி மற்றும் சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்களின் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமி, அதிரடியாக 26 புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளார். ஆனால், இதற்குப் பதிலடி கொடுத்துள்ள சி.வி.சண்முகம் தரப்பினர், தங்களை கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரமில்லை என்றும், தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்க உடனடியாக அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், சட்டமன்றக் குழுத் தலைவர் மற்றும் கொறடா பதவிகள் தங்களது குழுவிற்கே வழங்கப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் சபாநாயகரிடம் தனித்தனியாக மனு அளித்துப் போட்டி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 25 எம்.எல்.ஏ.க்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் உடனடியாகத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயன்று வருகிறார். இது தொடர்பாக சென்னை பசுமை வழிச் சாலை இல்லத்தில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் புதிய மாவட்ட செயலாளர்களுடன் நேற்று அவர் அவசர ஆலோசனை நடத்தினார். சென்னை திரும்பியுள்ள தமிழக ஆளுநர் ஆர்லெகரை இன்று நேரில் சந்தித்து, இந்த தகுதி நீக்க விவகாரம் குறித்து மீண்டும் மனு அளித்து வலியுறுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், எஸ்.பி.வேலுமணி தரப்பினரும் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்தில் தங்களது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். நேற்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்த சி.வி.சண்முகம், காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் இதுகுறித்து விரிவாகப் பேசினர். இரு தரப்பு மனுக்கள் மீதும் இன்னும் பரிசீலனை தொடங்கவில்லை என்றும், மனுக்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகே சட்ட விதிகளின்படி இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். இரு அணிகளின் இந்த மோதலால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“அடிச்சுக்கிற மாதிரி நடிப்போம்.. ஆனா ஒன்னா இருப்போம்!”… விஜய் அரசை வீழ்த்த கைகோர்த்த திமுக – அதிமுக?… பின்னணி என்ன?… அதிரும் தமிழக அரசியல்…!!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவின் எஸ்பி வேலுமணி தரப்பைச்…

4 minutes ago

இனி சென்னை – திருச்சி… மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பறந்த மாஸ் ரயில்.. ‘டெஸ்ட் ரன்’ சக்சஸ்… புதிய சாதனை படைத்த தெற்கு ரயில்வே…!!!

தமிழகத்தின் மிக முக்கிய ரயில் போக்குவரத்து தமனியாக விளங்கும் சென்னை - திருச்சி வழித்தடத்தில், ரயில்களின் வேகத்தை அதிகரித்து பயண…

12 minutes ago

“3 கோடி சொத்துக்கு ஆசை” மெடிக்கல் வச்ச காதலி… மருந்து வாங்க வந்தவனுடன் கள்ளக்காதல்… கணவனைப் போட போட்ட ’10 லட்ச ரூபாய்’ ஸ்கெட்ச்… அம்பலமான பகீர் உண்மை..!!

ரவீந்திரா தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு தொடர் சட்டப் போராட்டத்தில் சிக்கித் தவித்து வந்தார்.…

17 minutes ago

த்ரிஷாவுக்கு அடித்த மெகா ஜாக்பாட்!… உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அதிரடி ஆஃபர்… பின்னணியில் இருக்கும் அரசியல் பிளான் என்ன?… ஷாக்கில் சினிமா உலகம்…!!!

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா கிருஷ்ணன், அரசியல்வாதியும் திரைப்பட தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் பின்னணியில் தயாராகும் ஒரு…

22 minutes ago

உஷார்..! உணவக QR கோடில் ஒளிந்திருக்கும் ஆபத்து.. ஹோட்டலில் அரங்கேறிய சம்பவம்.! இளம்பெண்ணை அலறவிட்ட ஊழியரின் வாட்ஸ்அப் மெசேஜ்..!!

புனேவில் உள்ள பிரபல ‘சோஷியல்’ (Social) உணவகத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரபல இன்ஃப்ளூயன்ஸரான ரிஷிகா தத்தா என்பவர்,…

33 minutes ago

கணவன் – மனைவிக்குள் வெடித்த சண்டை… 5 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்… பெற்ற தந்தையே செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்… ஆந்திராவில் பெரும் சோக சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கோருகொண்ட மண்டலத்திற்குட்பட்ட காதராடா கிராமத்தைச் சேர்ந்த ராமவரபு ராஜு என்பவருக்கும், அவரது மனைவிக்கும்…

34 minutes ago