15 வயதில் திருமணம், 22 வயதில் 6வது கர்ப்பம்…. கணவனின் விபரீத ஆசையால் டாக்டரே உறைந்து போயிட்டார்.. வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை..!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 22 வயது இளம் பெண் ஒருவர், சமீபத்தில் லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காகச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர், அந்தப் பெண் தற்போது 6வது முறையாகக் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துபோனார். வெறும் 22 வயதிற்குள்ளாகவே அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே 5 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி, 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில், “5 குழந்தைகள் இருக்கும்போது எதற்காக 6வது குழந்தை?” என்று மருத்துவர் கேட்க, அதற்கு அந்தப் பெண் அளித்த பதில் இன்னும் வேதனையளிப்பதாக உள்ளது. தனக்கு 15 வயதிலேயே திருமணம் நடந்துவிட்டதாகவும், வரிசையாகப் பெண் குழந்தைகளே பிறந்ததால், தற்போது ஒரே ஒரு ஆண் குழந்தை மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தனது கணவரும் குடும்பத்தினரும் மற்றொரு ஆண் குழந்தையை தீவிரமாக விரும்புவதால், அவர்களின் ஆசையை நிறைவேற்றவே தான் 6வது முறையாகக் கர்ப்பம் தரித்திருப்பதாக அந்தப் பெண் மிகவும் இயல்பாகக் குறிப்பிட்டுள்ளார். இதைக்கேட்டு கடுப்பான மருத்துவர், இளம் வயதில் தொடர்ச்சியாகக் கர்ப்பமடைவதால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்கள் குறித்து அந்தத் தம்பதியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவ உலகின் கூற்றுப்படி, ஒரு பிரசவத்திற்குப் பிறகு தாயின் உடல் பழைய நிலைக்குத் திரும்புவதற்கும், இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெறுவதற்கும் குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகள் வரை இடைவெளி இருப்பது மிகவும் அவசியமாகும். ஆனால், இந்த இளம் பெண்ணோ உடலைத் தேற்றிக் கொள்ள எந்தவொரு அவகாசமும் இல்லாமல், தொடர்ச்சியான கர்ப்பங்களால் கடுமையான ரத்த சோகை ஏற்பட்டு, உடல் ரீதியாக முற்றிலும் பலவீனமடைந்துள்ளார். போதிய இடைவெளி இல்லாத இத்தகைய தொடர் கர்ப்பங்கள் பிரசவ கால சிக்கல்களை அதிகரிப்பதுடன், குறைப்பிரசவம் ஏற்படுவதற்கும் அல்லது பிறக்கும் குழந்தை மிகக் குறைந்த எடையுடன் பிறப்பதற்கும் வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

அறிவியல் தொழில்நுட்பம் உலகை ஆளும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும், ஆண் வாரிசு மோகத்திற்காக ஒரு பெண்ணின் உயிரோடு விளையாடும் இத்தகைய பிற்போக்குத்தனமான சம்பவங்கள் வட மாநிலங்களில் தொடர்ந்து அரங்கேறி வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினரின் ஆசைக்காகத் தன் உடலையும் உயிரையும் பணையம் வைக்கும் இத்தகைய பெண்களின் நிலை, சமூகத்தில் இன்னும் பெண் கல்வி, விழிப்புணர்வு மற்றும் பாலின சமத்துவம் குறித்த தேவையை உரக்கச் சொல்கிறது. சட்டம் ஒருபுறம் இருந்தாலும், மக்களின் மனநிலையில் மாற்றம் வராதவரை இளம் பெண்களின் ஆரோக்கியமும் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே நீடிக்கும் என்பது இந்தச் சம்பவத்தின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

Nanthini

Recent Posts

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

29 minutes ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

29 minutes ago

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் கழுத்து நெரித்துக் கொலை… போதை இளைஞர்களின் கொடூர செயல்… போலீஸ் விசாரணையில் அம்பலமான கொடூரம்…!!

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…

39 minutes ago

16 வயதில் விபரீத முடிவு… பெற்றோரைக் கதறவிட்ட மாணவன்… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்… இளைஞனின் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…

49 minutes ago

ஐயோ… இது என்ன புதுசா இருக்கு… கல்யாணமே தேவையில்லையா?… டெல்லி ஹைகோர்ட் போட்ட ஒற்றைத் தீர்ப்பு… இணையத்தைக் கலக்கும் நியூஸ்…!!

சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…

51 minutes ago

“பள்ளியையே காணோம்… கண்டுபிடிச்சா ரூ1 லட்சம் ரொக்கம்… அதிரடி சவால் விட்ட எம்.பி சஞ்சய் சிங்… இணையத்தை வைரலாகும் பதிவு… உ . பி – யில் பரபரப்பு…!”

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…

59 minutes ago