2 வயது குழந்தைக்கு தடுப்பூசி…! “அதிகாலையில் மகனை கண்டு பதறிய தாய்….” நீதி கேட்டு போராடும் உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாள் பேட்டை ஊசி தோப்பு பகுதியில் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி கிருத்திகா. இவர்களது மகன் பூமீஸ் (2). நேற்று அங்கன்வாடியில் நடைபெற்ற முகாமில் பூமீசுக்கு 2 வயதிற்கான தடுப்பூசி போட்டுள்ளனர். இதனையடுத்து இரவில் கிருத்திகா தனது குழந்தையை தூங்க வைத்தார். இன்று அதிகாலை குழந்தை எழுந்திருக்காததால் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் குழந்தையின் உடலை வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். உடனே கிருத்திகாவின் உறவினர்கள் ஆம்புலன்சை துரத்தி வந்து அடுக்கம்பாறை பகுதியில் ஆம்புலன்ஸை வழிமறித்தனர். பின்னர் தடுப்பூசி போட்டதால் தான் குழந்தை உயிரிழந்ததாக குற்றம் சாட்டி நீதி வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

4 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

17 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

22 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

27 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. இல்லத்தரசிகளுக்கு இன்று காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்… CM விஜய் வெளியிடப்போகும் அந்த அறிவிப்பு….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…

31 minutes ago

அடுத்த பரபரப்பு.. எம்.எல்.ஏ பதவி காலி?… மொத்த கோட்டையோடு தவெக-வுக்கு தாவும் விஜயபாஸ்கர்?… ஒரே போடாய் போட்ட செங்கோட்டையன்….!

அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…

36 minutes ago