திண்டுக்கல் மாவட்டம் ஜி தும்மலபட்டியில் தபால் அலுவலகம் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு கொடைக்கானல் உபகோட்ட தபால் துறை ஆய்வாளர் பாண்டியராஜன் தபால் நிலையத்தில் ஆய்வு நடத்தி பல்வேறு சேமிப்பு திட்டங்களில் வாடிக்கையாளர்கள் செலுத்திய தொகை விபரங்களை தணிக்கை செய்தார்.
அப்போது சேமிப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், குறுகிய கால வைப்பு நிதி கணக்கு உள்ளிட்ட பல்வேறு சேமிப்பு திட்டங்களில் வாடிக்கையாளர்களின் பணம் வரவு வைக்கப்படாமல் சுமார் 52 லட்சத்து 5 ஆயிரத்து 609 ரூபாய் பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி கிளை தபால் அலுவலக அதிகாரி முனியாண்டியை பணியிடை நீக்கம் செய்து உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதனையடுத்து முனியாண்டி தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் முனியாண்டி தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி முனியாண்டியை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…