மீண்டும் அதிர்ச்சி..! ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு செய்த சில மணி நேரங்களில்… ஷாக் கொடுத்த ஈரான்… பற்றி எரியும் ஹர்மூஸ்…!!

Spread the love

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள தாக்குதல் உலக நாடுகளை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போர் நிறுத்தத்தை (Ceasefire) காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற குறைந்தது இரண்டு சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு கப்பலின் மேற்பகுதி பலத்த சேதமடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதமோ அல்லது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்போ ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலை ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) முன்னின்று நடத்தியுள்ளது. முன்னறிவிப்பு ஏதுமின்றி ஈரான் படைகள் தாக்குதல் நடத்தியதாகக் கப்பல் போக்குவரத்து அமைப்புகள் கூறினாலும், கடல்சார் விதிகளை மீறியதாலும் எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தியதாலுமே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஈரான் தரப்பு வாதிடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கக் கடற்படை ஈரானிய சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றியதற்குப் பதிலடியாகவே ஈரான் இச்செயலில் ஈடுபட்டதாகப் பார்க்கப்படுகிறது.

அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்தத்தை நீட்டித்தாலும், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதனால் ஈரான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள நிலையில், ஈரானின் இந்தத் தாக்குதல் மீண்டும் போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம், சர்வதேச எரிசக்தி சந்தையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Soundarya

Recent Posts

BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…

3 மணத்தியாலங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்…! ரூ.33 கோடியில் வெளியான மாஸ் திட்டம்… நடமாடும் மருத்துவ மையங்கள் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு…!!

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: “கலைஞர் கனவு இல்லம் இனி வெற்றி வீடு…” பட்ஜெட்டில் வெளியான அதிரடி பெயர் மாற்றம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000-ஆக அதிகரிப்பு… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: மின் கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு…! 40,000 பழைய மின்மாற்றிகளை மாற்ற அதிரடி திட்டம்…!!

தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கீடு… நிதிநிலை அறிக்கையில் வெளியான அதிரடித் திட்டங்கள்…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…

3 மணத்தியாலங்கள் ago