சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள பார் ஒன்றில் நேற்று இரவு இரு தரப்பினரிடையே குடித்துவிட்டு நடனம் ஆடும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பவுன்சர்கள் அவர்களை வெளியேற்றிய பிறகும், அருகிலுள்ள கடை வாசலில் மீண்டும் மோதிக் கொண்டனர். பவுன்சர்கள் அவர்களைத் தடுத்து அங்கிருந்து அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து, ஒரு தரப்பினர் மூன்று இருசக்கர வாகனங்களிலும், மற்றொரு தரப்பினர் சொகுசு காரிலும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் காரின் மீது கற்களை வீச முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காரில் இருந்த நபர்கள், வாகனத்தை வேகமாக இயக்கி அவர்களை இடிக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக, அந்த வழியே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண்கள் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 18 வயதுடைய யான்சி என்ற பெண் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த 17 வயது தோழி பலத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த யான்சி விழுப்புரம் மாவட்ட இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்தவர் என்பதும், திருவள்ளூரில் உள்ள தோழியைப் பார்க்க வந்தவர் கடந்த 10 நாட்களாகப் பக்கத்து ஊரைச் சேர்ந்த பவுசியா தீபிகா என்பவரது வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. கடந்த 28ஆம் தேதி சினிமாவுக்குச் சென்றுவிட்டு மறுநாள் காலை தாமதமாக வந்ததால் பவுசியாவின் தாய் திட்டியுள்ளார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய போதே இந்தத் துயர விபத்தில் அவர்கள் சிக்கியுள்ளனர். காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சுமன் என்பவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், பெளகாவி மாவட்டத்தைச் சேர்ந்த பர்வதம்மா (46) என்பவருக்கும், சந்திரப்பா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில்,…
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களும் பிளவுகளும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் மன…
சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி, மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை…
தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கல்வித்துறையின் தற்போதைய அவலநிலை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பதும், அதுகுறித்த விவாதங்கள் எழுவதும் காலம் காலமாக தொடரும் ஒரு வழக்கமான…
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மீண்டும் அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இன்று…