சென்னையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 15 வயது சிறுவன் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள எம்ஜிஆர் நகர் மற்றும் காமராஜர் தெரு பகுதியில் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. மாநகராட்சிக்கு சொந்தமான இந்த பள்ளி வளாகத்தின் தரைத்தளத்தில் இரண்டு அடுக்குடன் கூடிய புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஆஷிஷ் பேரா என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் தன்னுடைய 15 வயதுடைய மகனுடன் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் இவர்கள் கட்டிடத்தில் இரண்டாவது தளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது 15 வயதுடைய சிறுவன் சாரத்தின் மீது நின்று பலகையை எடுக்க முயற்சித்துள்ளார். அதில் இரண்டாவது மாடியில் இருந்து சிறுவன் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தான். இதனால் பலத்த காயம் அடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…