சென்னையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 15 வயது சிறுவன் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள எம்ஜிஆர் நகர் மற்றும் காமராஜர் தெரு பகுதியில் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. மாநகராட்சிக்கு சொந்தமான இந்த பள்ளி வளாகத்தின் தரைத்தளத்தில் இரண்டு அடுக்குடன் கூடிய புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஆஷிஷ் பேரா என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் தன்னுடைய 15 வயதுடைய மகனுடன் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் இவர்கள் கட்டிடத்தில் இரண்டாவது தளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது 15 வயதுடைய சிறுவன் சாரத்தின் மீது நின்று பலகையை எடுக்க முயற்சித்துள்ளார். அதில் இரண்டாவது மாடியில் இருந்து சிறுவன் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தான். இதனால் பலத்த காயம் அடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
