“அய்யோ அப்பா.. என்னை காப்பாத்து.. தந்தையிடம் கதறிய 33 வயது சத்யா”… இறுதியில் நடந்த கண்ணீர் மல்க வைக்கும் சம்பவம்…!

Spread the love

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 10 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொட்டியபுரம் ஊராட்சி கருத்தானூர் பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவர், தனது கணவரைப் பிரிந்து இரு குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். அவர் பணியாற்றி வந்த வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடையில் மேலாளராக இருந்த சக்திவேல் என்பவருடன் சத்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

சம்பவத்தன்று இரவு சக்திவேல் சத்யாவின் வீட்டிற்குச் சென்று அவரை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இதற்கு சத்யா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த சத்யாவின் 10 வயது மகன் கிஷாந்த், சக்திவேலை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிறுவன் கிஷாந்தை சரமாரியாக வெட்டியுள்ளார்.

தன் மகனைக் காப்பாற்ற முயன்ற சத்யாவையும் சக்திவேல் கொடூரமாகத் தாக்கியதில், சத்யாவின் வலது கை மணிக்கட்டு துண்டானது. ரத்த வெள்ளத்தில் அலறியபடி சத்யா தனது தந்தை வீட்டிற்கு ஓடி வந்து உதவி கோரியுள்ளார். உறவினர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது சிறுவன் கிஷாந்த் ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்தான். உடனடியாக இருவரையும் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சக்திவேலைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க நினைத்த சக்திவேல், அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆசைக்கும் கோபத்திற்கும் இடையில் ஒரு பிஞ்சு உயிர் பறிபோனதுடன், குற்றவாளியும் தற்கொலை செய்துகொண்ட இந்த துயரச் சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“உன் புருஷன் எனக்கு.. என் புருஷன் உனக்கு!”.. நீதிமன்றத்தையே அதிர வைத்த சகோதரிகளின் வினோத ஒப்பந்தம்… ஸ்தம்பித்த நீதிபதிகள்… வைரலாகும் குவாலியர் சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தங்களது கணவர்களைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை…

4 minutes ago

பதறவைக்கும் கொடுமை..! 12 வயது சிறுமிக்கு வளைகாப்பு… “உயிருக்கே ஆபத்து” இணையத்தை உலுக்கும் புகைப்படங்களால் கொந்தளிக்கும் மக்கள்..!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு 12 வயது சிறுமிக்கு வளைகாப்பு (Baby Shower) நடத்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும்…

8 minutes ago

BREAKING: ஆட்சியைப் பிடிக்கப் போகும் விஜய்…. சற்றுமுன் அவசர ஆலோசனை..!

தமிழகத்தில் புதிய அரசு அமையவுள்ள சூழலில், சென்னை பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் விஜய் இன்று தீவிர…

15 minutes ago

இப்படியுமா ஒருத்தர் மாம்பழம் பறிப்பாரு? மாம்பழம் பறிக்கப் போய் மரத்தையே வேரோடு பிடுங்கிய நபர்… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

சமூக வலைதளங்களில் ஒரு விசித்திரமான வீடியோ வைரலாகி வருகிறது, அதில் மாம்பழம் பறிக்கச் சென்ற ஒரு நபர் செய்த காரியம்…

18 minutes ago

விஜய்யின் ‘ஆபரேஷன் 118’…. அண்ணா அறிவாலயத்தை அதிரவைத்த ராகுல் காந்தியின் திடீர் மூவ்… செம ஷாக்கில் ஸ்டாலின்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ள நிலையில், 108 இடங்களைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம்…

20 minutes ago

“தமிழகத்தில் ஒரு மாற்றத்தை தருவார்… தம்பி விஜய் தலைமையிலான அரசுக்கு என் வாழ்த்துகள்”… சீமானின் நெகிழ்ச்சி வாழ்த்து…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில்,…

23 minutes ago