கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சிக்கா டுகொடி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் வசித்து வரும் தம்பதியினருக்கு 1.5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று மதியம் பெற்றோர் வீட்டில் இருந்தபோது, குழந்தை பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பால்கனியின் தடுப்பைத் தாண்டி 3-வது மாடியில் இருந்து குழந்தை திடீரென கீழே சாலையில் விழுந்தது.
குழந்தை கீழே விழுவதைக் கண்ட அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து, உடனடியாக வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடிச்சென்று குழந்தையை மீட்டனர். கை, தலை உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயமடைந்த குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தை 3-வது மாடியில் இருந்து கீழே விழும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர விபத்து சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், கியாரா அத்வானி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.…
ஹைதராபாத்தில் உள்ள மௌலா அலி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 20 வயது இளம்பெண் அதிவேக ரயில் மோதி…
விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த வழக்கமான வணிக ரீதியான பயணிகள் விமான சேவைகள் முடிவுக்கு வரவுள்ளன.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது…
திரையுலகில் பல ஆண்டுகளாக எவர்கிரீன் நாயகியாக முத்திரை பதித்து வரும் நடிகை த்ரிஷா, நடிப்பில் இருந்து ஓய்வுபெற்று தயாரிப்பில் களமிறங்க…
தனித்துப் போட்டியிடுவதையே தனது முதன்மைக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டு வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மையில்…