ஹைதராபாத்தில் உள்ள மௌலா அலி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 20 வயது இளம்பெண் அதிவேக ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். ஜங்காவ் பகுதியைச் சேர்ந்த மானசா என்ற அந்தப் பெண், தனது பெற்றோருடன் கோல்கொண்டா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து மௌலா அலி நிலையத்தை வந்தடைந்தார். ரயிலில் இருந்து இறங்கிய பிறகு, அவர்கள் நிலையத்தின் வெளியே செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, இரண்டாவது நடைமேடையில் இருந்து முதல் நடைமேடைக்குச் செல்வதற்காகப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தாமல், மானசா நேரடியாகத் தண்டவாளத்தின் குறுக்கே நடந்து கடக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் செகந்திராபாத் நோக்கி அதிவேகமாக வந்த வந்தே பாரத் ரயில் அவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த எதிர்பாராத கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் அரங்கேறி வரும் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்களும் படுகொலைகளும் பொதுமக்கள்…
இன்றைய சட்டமன்ற அலுவலில் உரையாற்றிய சபாநாயகர் JCD பிரபாகர், தவெக அரசின் 100 நாள் சாதனைகளைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்குப்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…
கோவை கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களால் தாக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும்…
திமுக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகனை விடுவித்து, புதியவரை நியமிக்க கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள்…
பாஜகவின் 'B டீம்' என்ற திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கும், RSS சதி எனும் குற்றச்சாட்டுகளுக்கும் முன்னாள் மாநிலத்…