மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் காதல் தோல்வி காரணமாக 24 வயது இளைஞர் தன் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மும்பையை சேர்ந்த சோனு பராய் மற்றும் மனிஷா யாதவ் இருவரும் காதலித்து வந்துள்ளனர். மனிஷா வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாக சோனு சந்தேகித்ததால் எட்டு நாட்களுக்கு முன்பு மனுஷா காதலை முறித்துக் கொண்டதால் மேலும் சந்தேகம் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை சோனு மனிஷாவை ஒரு முதியோர் இல்லத்திற்கு அருகே சந்தித்து பேச வேண்டும் என்று அழைத்துள்ளார்.
அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சோனு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனிஷாவை கொடூரமாக குத்தி கொலை செய்தார். உடனடியாக அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டு அவரும் கற்பனை செய்து கொண்டார். உடனே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் இருவருடைய உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குருகுலத்தில் தங்கிப் படித்து வந்த 11 வயது சிறுவன் திவ்யான்ஷ் திவேதி, மிகக்…
திருமணம் முடிந்த முதலிரவு அன்று, தாய் தனது மருமகளுக்குப் பால் கொடுத்துவிட்டு "தூங்குங்கள்" என்று கூறிச் செல்ல முயன்றார். அப்போது…
தங்களது அன்புக்குரியவர்களின் மறைவுக்குப் பின், அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சகோதரி செய்துள்ள விசித்திரமான காரியம் இணையத்தில் நெகிழ்ச்சியையும்…
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக கோமியத்தைக் குடிக்க வேண்டும் என அந்த…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வினோத வீடியோவில், நண்டு ஒன்று பாம்பின் தலையை வேட்டையாடும் காட்சிகள் காண்போரை அதிரவைத்துள்ளன. …
டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், அங்குள்ள உயர் அதிகாரிகளால் கட்டாய மதமாற்ற முயற்சிக்கும், தனிப்பட்ட ரீதியான…